இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி - முன்னோடியான இளைஞர்!
Jun 24, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர். யார் அந்த ரோபோடிக் எஞ்சினியர். அவரின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்காக ஊரணி புரத்தைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர் தான் இந்த தேவேந்திரன். விவசாயத்தின் மீதிருந்த அதீதப்பற்றால் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு தஞ்சாவூருக்குத் திரும்பிய தேவேந்திரன் தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். நம்மாழ்வாரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட தேவேந்திரன் தான் மேற்கொண்டுவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

விவசாயத்தை விளையாட்டாக மேற்கொள்வோம் என்ற நம்மாழ்வாரின் கூற்றையே அடிப்படை நெறியாகக் கொண்டிருக்கும் தேவேந்திரன், சோழர்கால பாரம்பரிய தற்காலிக கலையான குத்து வரிசை, அடிமுறை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பயிற்சி பள்ளி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

பாரம்பரிய உணவை உட்கொள்ள வேண்டும், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இக்கலையைக் கற்க முக்கிய கோட்பாடாகவும் தேவேந்திரன் வைத்திருக்கிறார். சோழர்கால தற்காப்புக் கலைகளைப் பயில்வதன் மூலமும், சத்தான பாரம்பரியமிக்க உணவை உண்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிவதாகப் பயிற்சிபெறும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்மாழ்வாரின் வார்த்தைகளையே வாழ்வியல் தத்துவமாகப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்வதோடு, இளைய தலைமுறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் தேவேந்திரன் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Tags: இயற்கை விவசாயம்Love for organic farming: Trying to preserve tradition - a pioneering youthஇளைஞர்
ShareTweetSendShare
Previous Post

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Next Post

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies