கர்நாடக மாநிலம் பெலகாவியில் 5 இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கலி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை மரத்தில் கட்டிவைத்துத் தாக்குதல் நடத்தினர்.
சட்டவிரோதமாக இறைச்சி கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பசுக்களைப் பாதுகாத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.