மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!
Mar 15, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தைத் தவிர்க்க டிராகன் புரூட்ஸ் எனும் மருத்துவ குணமிக்க பழத்தைச் சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபி.  குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் டிராகன் பழ விவசாயம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராமுலுவுக்கு ராகி, அவரை, துவரை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வதுதான் பிரதான தொழிலாக இருந்துவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பெரும் நஷ்டத்தையே ஸ்ரீராமுலு சந்தித்து வந்துள்ளார். தந்தையின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன் கோபி, டிராகன்  எனும் மருத்துவ குணம் கொண்ட பழங்களைச் சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கினார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் குறைவான செலவில் டிராகன் பழங்கள் விவசாயத்தை மேற்கொண்டதால் தனக்கு அதிகளவிலான லாபம் கிடைத்திருப்பதாகவும் கோபி தெரிவிக்கிறார்.

கோபியும் அவரது தந்தை ஸ்ரீராமுலும் இணைந்து கர்நாடகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நேரில் சென்று டிராகன் செடிகளைப் பயிரிடும் முறைகள் குறித்து போதுமான பயிற்சியைப் பெற்றுள்ளனர். முதலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4.5 லட்ச ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நிலையில், அதிக லாபம் கிடைத்ததையடுத்து அதிகளவில் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

புற்றுநோய் உள்ளிட்ட 42 வகையிலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் ட்ராகன் பழங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட டிராகன் செடிகளில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து அதன் மூலம் லாபம் பெற்றுவரும் நிலையில் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூச்சிமருந்தோ, ரசாயன உரங்களையோ பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாகவும் கோபி தெரிவிக்கின்றார். ஒரே சாகுபடியை மேற்கொண்டு அடுத்தடுத்து நஷ்டங்களைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு மாற்று விவசாயத்திற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கும் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: Success comes from thinking hard: Farmer who grows dragon fruit and accumulates profitsலாபத்தை குவிக்கும் விவசாயிடிராகன் பழம்
ShareTweetSendShare
Previous Post

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Next Post

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies