மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தைத் தவிர்க்க டிராகன் புரூட்ஸ் எனும் மருத்துவ குணமிக்க பழத்தைச் சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபி.  குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் டிராகன் பழ விவசாயம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராமுலுவுக்கு ராகி, அவரை, துவரை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வதுதான் பிரதான தொழிலாக இருந்துவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பெரும் நஷ்டத்தையே ஸ்ரீராமுலு சந்தித்து வந்துள்ளார். தந்தையின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன் கோபி, டிராகன்  எனும் மருத்துவ குணம் கொண்ட பழங்களைச் சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கினார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் குறைவான செலவில் டிராகன் பழங்கள் விவசாயத்தை மேற்கொண்டதால் தனக்கு அதிகளவிலான லாபம் கிடைத்திருப்பதாகவும் கோபி தெரிவிக்கிறார்.

கோபியும் அவரது தந்தை ஸ்ரீராமுலும் இணைந்து கர்நாடகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நேரில் சென்று டிராகன் செடிகளைப் பயிரிடும் முறைகள் குறித்து போதுமான பயிற்சியைப் பெற்றுள்ளனர். முதலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4.5 லட்ச ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நிலையில், அதிக லாபம் கிடைத்ததையடுத்து அதிகளவில் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

புற்றுநோய் உள்ளிட்ட 42 வகையிலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் ட்ராகன் பழங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட டிராகன் செடிகளில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து அதன் மூலம் லாபம் பெற்றுவரும் நிலையில் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூச்சிமருந்தோ, ரசாயன உரங்களையோ பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாகவும் கோபி தெரிவிக்கின்றார். ஒரே சாகுபடியை மேற்கொண்டு அடுத்தடுத்து நஷ்டங்களைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு மாற்று விவசாயத்திற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கும் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: Success comes from thinking hard: Farmer who grows dragon fruit and accumulates profitsலாபத்தை குவிக்கும் விவசாயிடிராகன் பழம்
ShareTweetSendShare
Previous Post

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Next Post

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies