கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!
Jan 14, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 வயது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து சிறுவனைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் சிறுவனின் உறவினர்கள் உடலை கொண்டு செல்ல கூடாது எனக்கூறி, உடலை எடுத்து வந்து அஞ்செட்டியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த போலீசார், சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடக மாநிலம் உனசனஅள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேவன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாவனட்டி மாதேவன் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகிவந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணுடன் மாதேவன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததாகவும், இதனால் சிறுவனைக் கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் சிறுவனின் வாயில் பீரை ஊற்றி மயக்கமடையச் செய்து கொடூரமாகக் கொலை செய்ததும் விசாரணையின் மூலம் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ரதி என்ற இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: Youths who brutally murdered a 13-year-old boy: 3 arrested
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Next Post

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies