கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!
Jul 5, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 வயது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து சிறுவனைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் சிறுவனின் உறவினர்கள் உடலை கொண்டு செல்ல கூடாது எனக்கூறி, உடலை எடுத்து வந்து அஞ்செட்டியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த போலீசார், சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடக மாநிலம் உனசனஅள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேவன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாவனட்டி மாதேவன் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகிவந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணுடன் மாதேவன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததாகவும், இதனால் சிறுவனைக் கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் சிறுவனின் வாயில் பீரை ஊற்றி மயக்கமடையச் செய்து கொடூரமாகக் கொலை செய்ததும் விசாரணையின் மூலம் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ரதி என்ற இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: Youths who brutally murdered a 13-year-old boy: 3 arrested
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Next Post

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

Related News

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies