ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!
Aug 26, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் உத்தரவின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றமும், மாமன்றமும் எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தனியார் கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றார்போல கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படும் நிலையில், அந்த வரிவிதிப்பில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்தது.

மாநகராட்சியில் தீர்மானம் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலமாகவோ குறைக்கப்பட வேண்டிய வரியை மாநகராட்சி அதிகாரிகளின் ஆதரவோடு ஆளுங்கட்சியினர் குறைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது வரியைக் குறைப்பது போலக் குறைத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்றதன் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

வரிக்குறைப்பு மோசடியைக் கண்டுபிடித்த மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, வரிவிதிப்பு அதிகாரியின் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். கடந்த ஓராண்டாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில்   மண்டலத் தலைவர் ஒருவரின் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் கட்டடங்களுக்கு வழக்கமாக வரிவிதிக்கும் வரிவிதிப்பு அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி கம்யூட்டர் ஆப்ரேட்டர்களே ஆளுங்கட்சியினரின் உத்தரவுக்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

தோராயமாக 10 ஆயிரம் ரூபாய் வரி கட்டவேண்டிய தனியார் நிறுவனத்தை அணுகி 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் எனக் கட்டணத்தை வாங்கிவிட்டு அனைத்து வரிகளையும் கட்டியது போலக் கணக்குக் காட்டியிருப்பதும் உறுதியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றிருக்கும் இந்த மோசடி சம்பவம் ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் உத்தரவின்படியே நடந்ததாகக் கைதானவர்கள் ஒப்புக் கொண்டதால் பிரச்சனை பூதாகரமானது. மிகப்பெரிய அளவில் நடைபெற்றிருக்கும் மோசடியை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கத் தொடங்கியதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற விசாரணையில்  திமுக மண்டலத் தலைவர்கள் புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

மண்டலத் தலைவர்களிடம் நடைபெற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவை ஏற்று அனைவரும் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் மதுரை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200 கோடி ரூபாய் அளவில் நடைபெற்றிருக்கும் வரிக்குறைப்பு மோசடியை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவதற்கு முன்பாகவே இதனை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராஜினாமா தொடர்பான உத்தரவை முதல்வர் பிறப்பித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முறைகேடு தொடர்பான புகார் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் மட்டுமல்லாது மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் அனைத்து மாநகராட்சிகளிலும் உரிய ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நீதிமன்றமும், மாமன்றமும் கூடி எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: கூண்டோடு சிக்கிய திமுகவினர்Maduraiமதுரை மாநகராட்சிmk stalin news todayRs. 200 crore tax deduction scam: DMK members trapped in a cage in Maduraiவரிகுறைப்பு மோசடி
ShareTweetSendShare
Previous Post

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

Next Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Related News

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies