மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இலவச உபகரணங்களைப் பெறும் முறை குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏழ்மையை 14.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. மக்கள் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை கொண்டிருக்கும் மத்திய அரசு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையிலான உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தை உருவாக்கி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ADAP எனப்படும் Assistance to Differently Abled people எனும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், செவிதிறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கு பிரத்யேக உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர பேட்டரி வாகனங்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கி நடப்பான்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாக்கிங் ஸ்டிக் என அவரவர் தேவைகளுக்கு ஏற்றாற்போல பயன்பட்டு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதே போல ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயது நிறைந்தவர்களுக்கான கிரிப் பேண்டுகள், இடுப்பு வலி நிவாரணி பேண்டுகள், செவி திறன் குறைபாடு உடையவர்களுக்கான கருவி மற்றும் கை தாங்கி நடப்பான்களும் எவ்வித கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 8,000 மதிப்புள்ள 20 பொருட்கள் அடங்கிய கிட் உள்ளிட்ட அனைத்துவிதமான உபகரணங்களும் பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா மையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது பயனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை கே கே நகர் ESI மருத்துவமனையில் செயல்படும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் 22,500 ரூபாய்க்குக் கீழ் வருமானம் உடையவர்கள் இந்த சேவைகளில் முற்றிலுமாக பயனடையலாம் எனவும்,  ESI மருத்துவமனையை இந்த சேவைகளுக்காக அணுகும் நபர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அவர்களுக்கான உபகரணங்களைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை கால்கள் செயலிழந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, ADAP திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பேட்டரி சக்கர வாகனத்தால், வெளி உலகைத் தற்சார்பாகப் பார்ப்பதற்கும், சொந்தமாகத் தொழில் செய்வதற்குமான நம்பிக்கையை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது

வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதோடு அவர்களின் மனதில் புதிய தன்னம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

Tags: குழந்தைகள்மாற்றுத்திறனாளிCentral government's amazing scheme: Free equipment for the differently-abledமத்திய அரசின் அசத்தல் திட்டம்பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திராமுதியவர்கள்மாற்றுத் திறனாளிகள்L MuruganTodayNEWS TODAYமத்திய அரசு
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Next Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies