மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!
Oct 14, 2025, 03:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இலவச உபகரணங்களைப் பெறும் முறை குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏழ்மையை 14.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. மக்கள் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை கொண்டிருக்கும் மத்திய அரசு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையிலான உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தை உருவாக்கி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ADAP எனப்படும் Assistance to Differently Abled people எனும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், செவிதிறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கு பிரத்யேக உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர பேட்டரி வாகனங்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கி நடப்பான்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாக்கிங் ஸ்டிக் என அவரவர் தேவைகளுக்கு ஏற்றாற்போல பயன்பட்டு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதே போல ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயது நிறைந்தவர்களுக்கான கிரிப் பேண்டுகள், இடுப்பு வலி நிவாரணி பேண்டுகள், செவி திறன் குறைபாடு உடையவர்களுக்கான கருவி மற்றும் கை தாங்கி நடப்பான்களும் எவ்வித கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 8,000 மதிப்புள்ள 20 பொருட்கள் அடங்கிய கிட் உள்ளிட்ட அனைத்துவிதமான உபகரணங்களும் பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா மையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது பயனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை கே கே நகர் ESI மருத்துவமனையில் செயல்படும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் 22,500 ரூபாய்க்குக் கீழ் வருமானம் உடையவர்கள் இந்த சேவைகளில் முற்றிலுமாக பயனடையலாம் எனவும்,  ESI மருத்துவமனையை இந்த சேவைகளுக்காக அணுகும் நபர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அவர்களுக்கான உபகரணங்களைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை கால்கள் செயலிழந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, ADAP திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பேட்டரி சக்கர வாகனத்தால், வெளி உலகைத் தற்சார்பாகப் பார்ப்பதற்கும், சொந்தமாகத் தொழில் செய்வதற்குமான நம்பிக்கையை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது

வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதோடு அவர்களின் மனதில் புதிய தன்னம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

Tags: பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திராமுதியவர்கள்மாற்றுத் திறனாளிகள்L MuruganTodayNEWS TODAYமத்திய அரசுகுழந்தைகள்மாற்றுத்திறனாளிCentral government's amazing scheme: Free equipment for the differently-abledமத்திய அரசின் அசத்தல் திட்டம்
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Next Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies