ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!
Mar 19, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரபேல், F-35 விமானங்களை விட விலை மலிவான கூடுதல் திறன் உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் MK1a போர் விமானங்களை 60 ஆயிரம் கோடிக்கு வாங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் சுயசார்பு திட்டத்தின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த நகர்வு, பாகிஸ்தான், சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலைத் தீரத்துடன் எதிர்கொள்ளும் விதமாக ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.  அந்த வகையில், உள்நாட்டுத் தயாரிப்பாள தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறது.

தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில்  உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த போர் விமானத்தில், மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன், மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.

4.5ம் தலைமுறை விமானமான எம்.கே.1ஏ போர் விமானத்தில் இருந்து பல வகை சூப்பர் சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும், BrahMos cruise,  Astra Mk-2 ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய எல்லையிலிருந்தபடி 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.

வான்வழியிலும், தரையிலும் ஒரே நேரத்தில் தாக்கும்  திறன் கொண்ட தேஜாஸ் எம்.கே. 1ஏ போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி,  60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 97 விமானங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டசால்ட்  நிறுவனத்திடமிருந்து 36 போர் விமானங்களை வாங்கும் இந்தியா, யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 194 கோடி செலவு செய்கிறது. அதன்படி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க  78 ஆயிரத்து 998 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

பிரிட்டனின் 5ம் தலைமுறை போர் விமானமான F-35 போர் விமானம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 942 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான  ஏ.கே.1ஏ  போர் விமானம் ஒன்றின் மதிப்பு 618 கோடி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஃபேல், F-35 போர் விமானங்களை விடக் குறைந்த  செலவில், கூடுதல் விமானங்களை இந்தியா வாங்க முடியும்.

ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், 2031ம் ஆண்டுக்குள் 97 எம்.கே.1ஏ விமானங்களை வழங்குவதாக HAL நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: F-35இந்திய விமானப்படைRafale is more modern than F-35: Tejas MK1a fighter jet ordered for Rs. 60MK1a- போர் விமானம்ரபேல்
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

Next Post

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies