ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரபேல், F-35 விமானங்களை விட விலை மலிவான கூடுதல் திறன் உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் MK1a போர் விமானங்களை 60 ஆயிரம் கோடிக்கு வாங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் சுயசார்பு திட்டத்தின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த நகர்வு, பாகிஸ்தான், சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலைத் தீரத்துடன் எதிர்கொள்ளும் விதமாக ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.  அந்த வகையில், உள்நாட்டுத் தயாரிப்பாள தேஜாஸ் இலகுரக போர் விமானத்தை  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறது.

தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில்  உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த போர் விமானத்தில், மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன், மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.

4.5ம் தலைமுறை விமானமான எம்.கே.1ஏ போர் விமானத்தில் இருந்து பல வகை சூப்பர் சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும், BrahMos cruise,  Astra Mk-2 ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய எல்லையிலிருந்தபடி 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.

வான்வழியிலும், தரையிலும் ஒரே நேரத்தில் தாக்கும்  திறன் கொண்ட தேஜாஸ் எம்.கே. 1ஏ போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி,  60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 97 விமானங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டசால்ட்  நிறுவனத்திடமிருந்து 36 போர் விமானங்களை வாங்கும் இந்தியா, யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 194 கோடி செலவு செய்கிறது. அதன்படி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க  78 ஆயிரத்து 998 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

பிரிட்டனின் 5ம் தலைமுறை போர் விமானமான F-35 போர் விமானம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 942 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான  ஏ.கே.1ஏ  போர் விமானம் ஒன்றின் மதிப்பு 618 கோடி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஃபேல், F-35 போர் விமானங்களை விடக் குறைந்த  செலவில், கூடுதல் விமானங்களை இந்தியா வாங்க முடியும்.

ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், 2031ம் ஆண்டுக்குள் 97 எம்.கே.1ஏ விமானங்களை வழங்குவதாக HAL நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய விமானப்படைRafale is more modern than F-35: Tejas MK1a fighter jet ordered for Rs. 60MK1a- போர் விமானம்ரபேல்F-35
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

Next Post

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies