உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சாவன் மாதப் பிறப்பையொட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. கோயிலில் உள்ள லிங்கத்திற்குப் பலவித பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.