மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகமாக இந்த போலோ வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அப்போது அவருடன் அம்மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.