குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? - முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!
Oct 15, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் குமரகிரி தண்டாயுதபாணி கோயிலில் மலைப்பாதை சரி செய்யப்படாததால் 10 ஆண்டுகளாகக் கோயில் திருப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதைப் போலச்
சேலம்,  அம்மாபேட்டை,  குமரகிரி தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்கும் இந்தக் கோயிலில் விசேஷ காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலில்தான் திருப்பணிகள் நடைபெறாமல் இருப்பது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.

குமரகிரி தண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காகக் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் மலைப்பாதை மேடு, பள்ளமாகவும்,   குண்டு குழியுமாகவும் உள்ளதாகக் காரணம் கூறும் அறநிலையத் துறை அதிகாரிகள்  திருப்பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அதே சமயம் மலைப்பாதையைச் சரி செய்யும் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

திருப்பணிகள் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்பணி விவகாரம் காரணமாகத் தலையணை பகுதியில் முருகன் சிலை கொண்டுவரப்பட்டு தினம் தோறும் பூஜைகள் நடக்கும் நிலையில், தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோயிலின் அடிவாரத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோயில் வளாகத்தில் எரிக்கப்படுவது பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

மலை மீதுள்ள தண்டாயுதபாணியைப் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகக் கடந்த 2009 ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பக்தர்களின் பங்களிப்பாக 28.70 லட்சம் ரூபாய் தரப்பட்டது. இதனுடன்  அறநிலையத்துறை நிதி சேர்த்து மொத்தம் 84.80 லட்சம் ரூபாயில் மலைப்பாதை அமைக்கப்பட்டது.

இந்தப் பாதை அமைக்கப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.  அதே நேரத்தில் கோயிலில் திருப்பணியும் துவங்கப்பட்டது. ஆனால் மலைப்பாதை சரியில்லாததால் திருப்பணிகள் தொடங்கப்பட்ட மூன்றே மாதங்களில் நிறுத்தப்பட்டு விட்டது.

முருக பக்தர்களுக்குப் பழனியில்  மாநாடும் திருச்செந்தூரில் கும்பாபிஷேகமும் நடத்தியதாகக் கூறும் தமிழக அரசு சேலம் தண்டாயுதபாணி கோயிலில்  திருப்பணிகளை மீண்டும் துவக்குமா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: திருப்பணிகள்temple news todaytn templeWhen will the Kumbabhishekam be performed for Kumaragiri Kumaran? - The renovations are stalledகுமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்?
ShareTweetSendShare
Previous Post

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ஐரோப்பாவை பொசுக்கும் “SILENT KILLER” – 10 நாட்களில் 2300 பேர் மரணம்!

Related News

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies