அழிவின் விளிம்பில் "சென்னிமலை போர்வைகள்" கைகொடுக்குமா அரசு?
Jul 14, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

Web Desk by Web Desk
Jul 14, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் புகழ்பெற்ற சென்னிமலை போர்வைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால்  உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் தயாரிக்கப்படும் போர்வைகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டவை. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உருவாகும் சென்னிமலை போர்வைகளைப் பலரும் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றது முன்பொரு காலம்…ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் கூட சென்னிமலை போர்வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் பிறகும் வருடத்திற்கு வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து  வருவதால்  போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.  வட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இங்கிருந்து நடைபெற்ற ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் போர்வை உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் சென்னிமலை போர்வைகளை வாங்குவதை அங்குள்ள நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. வெளிநாடுகளுக்கும் போர்வைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னிமலை போர்வைகள் தேக்கமடைந்துள்ளன.

ஈரோடு, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது பாதியாகக் குறைந்து 25 ஆயிரம் விசைத்தறி கூடங்களே செயல்பட்டு வருகின்றன.  தொழில் நலிவடைந்து வருவதால் விசைத்தறி இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தையில் விசைத்தறி கூடங்களைத் தாண்டி பிரிண்டட் போர்வைகள் விற்பனைக்கு வருவதும் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகை காலங்களில் வீடுகளுக்கு வேட்டி, சேலை கொடுப்பது போல் தீபாவளி காலங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் போர்வை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தினால் விசைத்தறி கூடங்களை காக்க முடியும் எனவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி தொழிலாளர்களின் நலனைப்  பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: "Chennai Mountain Blankets" on the verge of extinction Will the government help?சென்னிமலை போர்வைகள்ழிவின் விளிம்பில் சென்னிமலை போர்வைகள்சென்னிமலைஈரோடு மாவட்டம்அரசு
ShareTweetSendShare
Previous Post

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

Next Post

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Related News

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

நெமிலியில் சாலையில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்!

சேலம் : சாலை ஓரம் லாரியை நிறுத்தியதால் ரூ.2,000 அபராதம் – ஓட்டுநர் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

“TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு!

மகனுக்காக வைகோ தன் மீது துரோகி பட்டம் : மல்லை சத்யா குற்றச்சாட்டு!

கழிவறையை சுத்தம் செய்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் : அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies