அழிவின் விளிம்பில் "சென்னிமலை போர்வைகள்" கைகொடுக்குமா அரசு?
Oct 16, 2025, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

Web Desk by Web Desk
Jul 15, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் புகழ்பெற்ற சென்னிமலை போர்வைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால்  உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் தயாரிக்கப்படும் போர்வைகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டவை. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உருவாகும் சென்னிமலை போர்வைகளைப் பலரும் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றது முன்பொரு காலம்…ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் கூட சென்னிமலை போர்வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் பிறகும் வருடத்திற்கு வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து  வருவதால்  போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.  வட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இங்கிருந்து நடைபெற்ற ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் போர்வை உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் சென்னிமலை போர்வைகளை வாங்குவதை அங்குள்ள நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. வெளிநாடுகளுக்கும் போர்வைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னிமலை போர்வைகள் தேக்கமடைந்துள்ளன.

ஈரோடு, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது பாதியாகக் குறைந்து 25 ஆயிரம் விசைத்தறி கூடங்களே செயல்பட்டு வருகின்றன.  தொழில் நலிவடைந்து வருவதால் விசைத்தறி இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தையில் விசைத்தறி கூடங்களைத் தாண்டி பிரிண்டட் போர்வைகள் விற்பனைக்கு வருவதும் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகை காலங்களில் வீடுகளுக்கு வேட்டி, சேலை கொடுப்பது போல் தீபாவளி காலங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் போர்வை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தினால் விசைத்தறி கூடங்களை காக்க முடியும் எனவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி தொழிலாளர்களின் நலனைப்  பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: ழிவின் விளிம்பில் சென்னிமலை போர்வைகள்சென்னிமலைஈரோடு மாவட்டம்அரசு"Chennai Mountain Blankets" on the verge of extinction Will the government help?சென்னிமலை போர்வைகள்
ShareTweetSendShare
Previous Post

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

Next Post

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

Related News

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies