பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.

ஒலியை விட 8 மடங்கு வேகம்… 1500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் எனப் பிற நாடுகளை மிரள வைத்துள்ளது இந்தியாவின் புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை.

எதிரி நாடுகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணைகளை  புரோஜக்ட் விஷ்ணு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிரமோஸ், அக்னி-5, ஆகாஷ் அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தற்போது பயன்பாட்டில் உள்ள பிரமோஸ் ஏவுகணையைவிட மிக ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆயிரம் முதல் 2000 கிலோ வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று தாக்கும் திறன் கொண்டது.

குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, தற்போது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் கண்களில் மண்ணை தூவி, அதிவேகத்தில் சென்று இலக்கை அழிக்கக் கூடியது. நிலம், கடல் அல்லது வான் பரப்பு என எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை மணிக்கு மூவாயிரத்து 675 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், புதிய ஹைபர் சோனிக் ஏவுகணையின் வேகத்தை பிரமோஸை விட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது DRDO.

புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த வரிசையில் , நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் போன்றவற்றிற்கு மத்தியில் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை நடத்தியிருப்பது இந்திய ராணுவத்தின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: பிரமோஸ் ஏவுகணைindian army news todayindian army3 times faster than Brahmos: India's monster that hit and destroyed a target at 1500 kmஇந்தியாவின் அசுரன்பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Next Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies