பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!
Jul 31, 2026, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.

ஒலியை விட 8 மடங்கு வேகம்… 1500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் எனப் பிற நாடுகளை மிரள வைத்துள்ளது இந்தியாவின் புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை.

எதிரி நாடுகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணைகளை  புரோஜக்ட் விஷ்ணு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிரமோஸ், அக்னி-5, ஆகாஷ் அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தற்போது பயன்பாட்டில் உள்ள பிரமோஸ் ஏவுகணையைவிட மிக ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆயிரம் முதல் 2000 கிலோ வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று தாக்கும் திறன் கொண்டது.

குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, தற்போது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் கண்களில் மண்ணை தூவி, அதிவேகத்தில் சென்று இலக்கை அழிக்கக் கூடியது. நிலம், கடல் அல்லது வான் பரப்பு என எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை மணிக்கு மூவாயிரத்து 675 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், புதிய ஹைபர் சோனிக் ஏவுகணையின் வேகத்தை பிரமோஸை விட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது DRDO.

புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த வரிசையில் , நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் போன்றவற்றிற்கு மத்தியில் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை நடத்தியிருப்பது இந்திய ராணுவத்தின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: பிரமோஸ் ஏவுகணைindian army news todayindian army3 times faster than Brahmos: India's monster that hit and destroyed a target at 1500 kmஇந்தியாவின் அசுரன்பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Next Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Related News

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies