சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
Jan 14, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் சிரியாவை குறிவைக்கக் காரணம் என்ன… விரிவாகப் பார்க்கலாம்..

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தூள்தூளாக்கிய காட்சிகள்தான் இவை…. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் நிலநடுக்கம் போன்ற அதிர்வை ஏற்படுத்த,  நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஒருவர், திடீரென பதறி ஓடிய காட்சி, தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மத்திய கிழக்குப் பகுதிகளில கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் இஸ்ரேல், தீவிரவாத குழுக்களை ஒழிப்பதாகக் கூறி ஏவுகணைகளை வீசி வருகிறது. காசாவில் ஹமாஸ் தீவிரவாத குழு மீது அதிரடி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் உடன் நேரடியாக மோதியது. தற்போது அங்கு போர்பதற்றம் தணிந்த நிலையில், இஸ்ரேலின் பார்வை சிரியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சிரியாவின் தெற்கு நகரமான ஸ்வேய்தாவில் அரசுப் படைகளுக்கும், துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததால், அங்கு மீண்டும் சண்டை தொடங்கியது. துரூஸ் ஆயுதக் குழுவை சிறுபான்மை இனமாக கருதும் இஸ்ரேல், அவர்களை பாதுகாக்கும் நோக்கில், டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீதும், சிரிய அரசுப் படைகளின் வாகனங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியது.

துரூஸ் ஆயுதக்குழுக்கள் போர் நிறுத்தத்தை மீறியதால்தான், அரசுப் படைகள் பதிலடி கொடுத்ததாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்த நிலையில், இதை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. துரூஸ் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேய்தா பகுதியில் இருந்து அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் 20 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்த பிறகு, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய இஸ்ரேல், சிரியாவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து சில மாதங்களுக்கு முன் தாக்குதலை நடத்தியிருந்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.

1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவர்கள் போரிட்ட நிலையில், அதற்குக் கைமாறு செலுத்தும் வகையில், சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு இஸ்ரேல் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அரசுப் படைகளை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை தற்போதும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: today newsஇஸ்ரேல்சிரியாIsrael targets Syria: Tensions rise again in the Middle Eastசிரியாவை குறிவைத்த இஸ்ரேல்war news today
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

Next Post

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies