சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
Oct 22, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் சிரியாவை குறிவைக்கக் காரணம் என்ன… விரிவாகப் பார்க்கலாம்..

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தூள்தூளாக்கிய காட்சிகள்தான் இவை…. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் நிலநடுக்கம் போன்ற அதிர்வை ஏற்படுத்த,  நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஒருவர், திடீரென பதறி ஓடிய காட்சி, தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மத்திய கிழக்குப் பகுதிகளில கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் இஸ்ரேல், தீவிரவாத குழுக்களை ஒழிப்பதாகக் கூறி ஏவுகணைகளை வீசி வருகிறது. காசாவில் ஹமாஸ் தீவிரவாத குழு மீது அதிரடி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் உடன் நேரடியாக மோதியது. தற்போது அங்கு போர்பதற்றம் தணிந்த நிலையில், இஸ்ரேலின் பார்வை சிரியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சிரியாவின் தெற்கு நகரமான ஸ்வேய்தாவில் அரசுப் படைகளுக்கும், துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததால், அங்கு மீண்டும் சண்டை தொடங்கியது. துரூஸ் ஆயுதக் குழுவை சிறுபான்மை இனமாக கருதும் இஸ்ரேல், அவர்களை பாதுகாக்கும் நோக்கில், டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீதும், சிரிய அரசுப் படைகளின் வாகனங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியது.

துரூஸ் ஆயுதக்குழுக்கள் போர் நிறுத்தத்தை மீறியதால்தான், அரசுப் படைகள் பதிலடி கொடுத்ததாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்த நிலையில், இதை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. துரூஸ் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேய்தா பகுதியில் இருந்து அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் 20 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்த பிறகு, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய இஸ்ரேல், சிரியாவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து சில மாதங்களுக்கு முன் தாக்குதலை நடத்தியிருந்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.

1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவர்கள் போரிட்ட நிலையில், அதற்குக் கைமாறு செலுத்தும் வகையில், சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு இஸ்ரேல் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அரசுப் படைகளை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை தற்போதும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: war news todaytoday newsஇஸ்ரேல்சிரியாIsrael targets Syria: Tensions rise again in the Middle Eastசிரியாவை குறிவைத்த இஸ்ரேல்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

Next Post

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies