சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் சிரியாவை குறிவைக்கக் காரணம் என்ன… விரிவாகப் பார்க்கலாம்..

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தூள்தூளாக்கிய காட்சிகள்தான் இவை…. ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பயங்கர சத்தம் நிலநடுக்கம் போன்ற அதிர்வை ஏற்படுத்த,  நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஒருவர், திடீரென பதறி ஓடிய காட்சி, தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மத்திய கிழக்குப் பகுதிகளில கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் இஸ்ரேல், தீவிரவாத குழுக்களை ஒழிப்பதாகக் கூறி ஏவுகணைகளை வீசி வருகிறது. காசாவில் ஹமாஸ் தீவிரவாத குழு மீது அதிரடி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் உடன் நேரடியாக மோதியது. தற்போது அங்கு போர்பதற்றம் தணிந்த நிலையில், இஸ்ரேலின் பார்வை சிரியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சிரியாவின் தெற்கு நகரமான ஸ்வேய்தாவில் அரசுப் படைகளுக்கும், துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததால், அங்கு மீண்டும் சண்டை தொடங்கியது. துரூஸ் ஆயுதக் குழுவை சிறுபான்மை இனமாக கருதும் இஸ்ரேல், அவர்களை பாதுகாக்கும் நோக்கில், டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீதும், சிரிய அரசுப் படைகளின் வாகனங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியது.

துரூஸ் ஆயுதக்குழுக்கள் போர் நிறுத்தத்தை மீறியதால்தான், அரசுப் படைகள் பதிலடி கொடுத்ததாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்த நிலையில், இதை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. துரூஸ் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேய்தா பகுதியில் இருந்து அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் 20 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்த பிறகு, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய இஸ்ரேல், சிரியாவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து சில மாதங்களுக்கு முன் தாக்குதலை நடத்தியிருந்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.

1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவர்கள் போரிட்ட நிலையில், அதற்குக் கைமாறு செலுத்தும் வகையில், சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு இஸ்ரேல் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அரசுப் படைகளை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை தற்போதும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: war news todaytoday newsஇஸ்ரேல்சிரியாIsrael targets Syria: Tensions rise again in the Middle Eastசிரியாவை குறிவைத்த இஸ்ரேல்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

Next Post

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies