பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வரும் இந்த தீ விபத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் ராமையன்பட்டி அரசுக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. நாள் தோறும் 180 முதல் 200 டன் குப்பைகள் கொட்டப்படும் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பரவி வானை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள ராமையன்பட்டி, தச்சநல்லூர், மானூர் ரஸ்தா ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாளையங்கோட்டை ஜங்சன், டவுன் மற்றும் பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பைக் கிடங்கில் பரவும் தீயை முழுமையாகக் கட்டுப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் புகை மூட்டத்தால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விடுவதற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தீ விபத்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பும் தொடர்கதையாகி வரும் நிலையில், தீயை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைக் கிடங்கில் தீ பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமுறை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாள்தோறும் பரவும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் மக்கள் தங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிப்பதோடு, இதுபோன்ற தீ விபத்துக் காலங்களில் அவற்றை உடனடியாக அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருநெல்வேலிBurning garbage dump: People suffocating due to respiratory problemsமூச்சு திணறும் மக்கள்எரியும் குப்பை கிடங்குபாளையங்கோட்டை ஜங்சன்டவுன்
ShareTweetSendShare
Previous Post

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Next Post

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies