திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?
Jul 22, 2025, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Web Desk by Web Desk
Jul 21, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 ஆண்டுகளாகத் திருநங்கையாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வங்கதேச இளைஞர் மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேச நபர் பிடிபட்டது எப்படி? இத்தனை ஆண்டுகள் திருநங்கை வேடம் தரிக்க காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.. விரிவாக

திருநங்கையாக நடிகர்கள் பல அழகாக நடித்திருப்பதைத் திரையில் பார்த்திருப்போம். ஆனால் இங்கோ திருநங்கை போர்வையில் பலரையும் நம்ப வைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

நேஹா.. இதுதான் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிடிபட்ட திருநங்கையின் பெயர். 8 ஆண்டுகள் திருநங்கையாகவே வாழ்ந்து வந்தவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது உளவுத்துறை. புத்வாரா பகுதியில் திருநங்கை நேஹாவின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அங்குள்ள பொதுமக்களிடம் சந்தேகத் தீயை விதைத்திருக்கிறது. ரகசிய தகவலின் பேரில் நேஹாவை கண்காணித்த போலீஸ், நேஹா வங்கதேசத்தைச்  சேர்ந்தவர் என்பதை முதலில் கண்டறிந்தனர்.

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த அவரை கைது செய்த போலீசார், தங்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

நேஹாவின் உண்மையான பெயர் அப்துல் கலாம் என்பதும், 10 வயதிலேயே இந்தியாவுக்குள் ஊடுருவினார் என்பதும் விசாரணையின் வேகத்தை அதிகரித்தது. மும்பையில் 20 ஆண்டுகள் வசித்த அப்துல்கலாம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது உருவத்தை, உடல் அமைப்பை மாற்றி நேஹா என்ற பெயரில் திருநங்கையாகவே 8 ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்.

உள்ளூர் ஏஜெண்டுகள் உதவியுடன் ஆதார், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை என அனைத்தையும் போலியாகப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. பலமுறை வங்கதேசத்திற்கு சென்று வந்ததைக் கண்டறிந்த போலீஸார், அவருக்கு ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிய ஏஜெண்டுகளையும் விசாரணை வளைத்திற்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் உளவுத்துறையும் அப்துல்கலாம் பற்றிய விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். உள்ளூர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த யாராவது அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உதவி செய்தார்களா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். நேஹா பாலினரீதியாக திருநங்கையா அல்லது தனது அடையாளத்தை மறைக்க ஒருவராக மாறு வேடமிட்டு வந்தாரா என்பதைக் கண்டறியப் பாலின சரிபார்ப்பு சோதனையை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றம், அடையாள அட்டை மோசடி எனப் பிடிபட்ட அப்துல்கலாமை விசாரணைக்குப் பின் நாடு கடத்தவும் உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags: இந்தியா20 years as a transgender: How did a Bangladeshi youth get trapped?திருநங்கையாக 20 ஆண்டுகள்வங்கதேச இளைஞர்தலைமறைவுதிருநங்கை
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Next Post

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Related News

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்ரீதர் வேம்பு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வங்கதேசம் : கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 19 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies