உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே மன்னார்குடியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக கூறினார்