மியான்மரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வகையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மியாவாடி நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முழங்கால் அளவு தேங்கி நின்ற இந்த வெள்ள நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.