கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை - பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் நகர் பகுதியில் இரண்டு சாலைகளை இணைக்கும் 30 அடி சாலை ஒன்று கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு சுமார்10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அந்த இடத்தை கமலேஷ் என்ற தனியார் முழுவதுமாக கூடாரம் அமைத்து வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் வெளிப்புறம் 6 மாதங்களுக்கு முன்னர் அரசு பொதுக்கழிப்பறை ஒன்று கட்ட முடிவு செய்தது. கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ள இடம் தன்னுடையது என கமலேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு அரசு வரைபடத்தை ஆய்வு செய்த பார்த்தபோது கமலேஷ் அமைத்துள்ள கூடாரத்தில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் கழிப்பறை அமைக்க போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆகியோர் நில அளவீடு செய்ய கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசு நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்தனர். இதில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் அதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.

அப்போது அரசு வரைபடத்துடன் வந்த அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வரைபடம் கொண்டு விளக்கினார். அத்துடன் விரைவில் அந்த இடத்தை மீட்டு மக்களுக்கு எளிமையாக பயணிக்கும் வகையில் 30 சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: Valliamman Nagar NelkundramChennaikoyambeduroad occupied by an individual30-foot road
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Next Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies