கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை - பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!
Jul 27, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் நகர் பகுதியில் இரண்டு சாலைகளை இணைக்கும் 30 அடி சாலை ஒன்று கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு சுமார்10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அந்த இடத்தை கமலேஷ் என்ற தனியார் முழுவதுமாக கூடாரம் அமைத்து வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் வெளிப்புறம் 6 மாதங்களுக்கு முன்னர் அரசு பொதுக்கழிப்பறை ஒன்று கட்ட முடிவு செய்தது. கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ள இடம் தன்னுடையது என கமலேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு அரசு வரைபடத்தை ஆய்வு செய்த பார்த்தபோது கமலேஷ் அமைத்துள்ள கூடாரத்தில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் கழிப்பறை அமைக்க போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆகியோர் நில அளவீடு செய்ய கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசு நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்தனர். இதில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் அதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.

அப்போது அரசு வரைபடத்துடன் வந்த அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வரைபடம் கொண்டு விளக்கினார். அத்துடன் விரைவில் அந்த இடத்தை மீட்டு மக்களுக்கு எளிமையாக பயணிக்கும் வகையில் 30 சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: Chennaikoyambeduroad occupied by an individual30-foot roadValliamman Nagar Nelkundram
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Next Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies