கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை - பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் நகர் பகுதியில் இரண்டு சாலைகளை இணைக்கும் 30 அடி சாலை ஒன்று கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு சுமார்10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அந்த இடத்தை கமலேஷ் என்ற தனியார் முழுவதுமாக கூடாரம் அமைத்து வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் வெளிப்புறம் 6 மாதங்களுக்கு முன்னர் அரசு பொதுக்கழிப்பறை ஒன்று கட்ட முடிவு செய்தது. கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ள இடம் தன்னுடையது என கமலேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு அரசு வரைபடத்தை ஆய்வு செய்த பார்த்தபோது கமலேஷ் அமைத்துள்ள கூடாரத்தில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் கழிப்பறை அமைக்க போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆகியோர் நில அளவீடு செய்ய கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசு நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்தனர். இதில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் அதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.

அப்போது அரசு வரைபடத்துடன் வந்த அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வரைபடம் கொண்டு விளக்கினார். அத்துடன் விரைவில் அந்த இடத்தை மீட்டு மக்களுக்கு எளிமையாக பயணிக்கும் வகையில் 30 சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: Chennaikoyambeduroad occupied by an individual30-foot roadValliamman Nagar Nelkundram
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Next Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies