கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை - பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!
Sep 1, 2026, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 02:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் நகர் பகுதியில் இரண்டு சாலைகளை இணைக்கும் 30 அடி சாலை ஒன்று கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு சுமார்10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அந்த இடத்தை கமலேஷ் என்ற தனியார் முழுவதுமாக கூடாரம் அமைத்து வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் வெளிப்புறம் 6 மாதங்களுக்கு முன்னர் அரசு பொதுக்கழிப்பறை ஒன்று கட்ட முடிவு செய்தது. கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ள இடம் தன்னுடையது என கமலேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு அரசு வரைபடத்தை ஆய்வு செய்த பார்த்தபோது கமலேஷ் அமைத்துள்ள கூடாரத்தில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் கழிப்பறை அமைக்க போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆகியோர் நில அளவீடு செய்ய கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசு நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்தனர். இதில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் அதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.

அப்போது அரசு வரைபடத்துடன் வந்த அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வரைபடம் கொண்டு விளக்கினார். அத்துடன் விரைவில் அந்த இடத்தை மீட்டு மக்களுக்கு எளிமையாக பயணிக்கும் வகையில் 30 சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: Chennaikoyambeduroad occupied by an individual30-foot roadValliamman Nagar Nelkundram
Share
Tweet
SendShare
Previous Post

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Next Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies