கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது - எல்.முருகன்
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் திருவிழா..! கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா..! ஆடி திருவாதிரை திருவிழா ஆகியவற்றிற்கு வருகை தரும்  பாரதப் பிரதமர் மோடி அவர்களை வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், கிழக்கே கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் இராஜேந்திர சோழன். ‘‘நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்’’ என விவரித்து, கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியதை எடுத்துக் கூறுகிறது இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி சாசனம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கப்பற்படை கொண்டு படைத்திறனில் முன்னோடி, சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய சிங்கம், பார்போற்றும் கட்டிடக் கலையில் உலகம் வியந்த சிற்ப கலைஞன், நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்திய மாமன்னன் என போற்றப்படுபவர் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் கீர்த்தியும் ஆளுமையும் தென்கிழக்கு ஆசியா வரை எதிரொலித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது வணிகம், சமயம், கட்டிடக்கலை தென்கிழக்கு ஆசியா முழுமையிலும் பரவி சிறப்புற்று விளங்கி இருந்தது. போற்றுதலுக்குரிய சோழப் பேரரசன், மாமன்னன் இராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை திருவிழாவையொட்டி, சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழகத்தின் கலாச்சார பெருமையையும் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும்  பாரதப் பிரதமர் இந்த விழாவில் பங்கேற்று நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது சிறப்பான ஒன்றாகும் என கூறியுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் .நரேந்திர மோடி அவர்களை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம்…! கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திப்போம்..! மாமன்னன் இராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags: PM Modiminister l muruganmodi tamilnadu visitGangaikonda Cholapuram.
ShareTweetSendShare
Previous Post

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Next Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies