கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது - எல்.முருகன்
Jul 29, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் திருவிழா..! கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா..! ஆடி திருவாதிரை திருவிழா ஆகியவற்றிற்கு வருகை தரும்  பாரதப் பிரதமர் மோடி அவர்களை வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், கிழக்கே கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் இராஜேந்திர சோழன். ‘‘நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்’’ என விவரித்து, கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியதை எடுத்துக் கூறுகிறது இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி சாசனம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கப்பற்படை கொண்டு படைத்திறனில் முன்னோடி, சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய சிங்கம், பார்போற்றும் கட்டிடக் கலையில் உலகம் வியந்த சிற்ப கலைஞன், நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்திய மாமன்னன் என போற்றப்படுபவர் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் கீர்த்தியும் ஆளுமையும் தென்கிழக்கு ஆசியா வரை எதிரொலித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது வணிகம், சமயம், கட்டிடக்கலை தென்கிழக்கு ஆசியா முழுமையிலும் பரவி சிறப்புற்று விளங்கி இருந்தது. போற்றுதலுக்குரிய சோழப் பேரரசன், மாமன்னன் இராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை திருவிழாவையொட்டி, சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழகத்தின் கலாச்சார பெருமையையும் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும்  பாரதப் பிரதமர் இந்த விழாவில் பங்கேற்று நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது சிறப்பான ஒன்றாகும் என கூறியுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் .நரேந்திர மோடி அவர்களை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம்…! கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திப்போம்..! மாமன்னன் இராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags: PM Modiminister l muruganmodi tamilnadu visitGangaikonda Cholapuram.
ShareTweetSendShare
Previous Post

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Next Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies