கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது - எல்.முருகன்
Apr 29, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் திருவிழா..! கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா..! ஆடி திருவாதிரை திருவிழா ஆகியவற்றிற்கு வருகை தரும்  பாரதப் பிரதமர் மோடி அவர்களை வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், கிழக்கே கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் இராஜேந்திர சோழன். ‘‘நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்’’ என விவரித்து, கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியதை எடுத்துக் கூறுகிறது இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி சாசனம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கப்பற்படை கொண்டு படைத்திறனில் முன்னோடி, சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய சிங்கம், பார்போற்றும் கட்டிடக் கலையில் உலகம் வியந்த சிற்ப கலைஞன், நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்திய மாமன்னன் என போற்றப்படுபவர் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் கீர்த்தியும் ஆளுமையும் தென்கிழக்கு ஆசியா வரை எதிரொலித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது வணிகம், சமயம், கட்டிடக்கலை தென்கிழக்கு ஆசியா முழுமையிலும் பரவி சிறப்புற்று விளங்கி இருந்தது. போற்றுதலுக்குரிய சோழப் பேரரசன், மாமன்னன் இராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை திருவிழாவையொட்டி, சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழகத்தின் கலாச்சார பெருமையையும் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும்  பாரதப் பிரதமர் இந்த விழாவில் பங்கேற்று நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது சிறப்பான ஒன்றாகும் என கூறியுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் .நரேந்திர மோடி அவர்களை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம்…! கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திப்போம்..! மாமன்னன் இராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags: PM Modiminister l muruganmodi tamilnadu visitGangaikonda Cholapuram.
ShareTweetSendShare
Previous Post

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Next Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies