சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் - பிரதமர் மோடி புகழாரம்!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் என கூறியதுடன், நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனும் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழீசுவரரை வழிபட்டது பெரும் பாக்கியம் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்க வேண்டும் என வழிபட்டதாக பேசிய பிரதமர் மோடி, இளையராஜாவின் இசை, ஓதுவார்களின் மந்திரங்கள் தன்னை மெய்மறக்க செய்தன எனவும் தெரிவித்தார்.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிவபக்தி கொண்டவர்களின் பெருமை சிவனைப் போல் என்றும் அழியாதது என தெரிவித்தார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெயர்கள் தேசத்தின் அடையாளங்கள் என கூறிய பிரதமர் மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியை நடத்தியவர்கள் சோழர்கள் எனவும் தெரிவித்தார்.

அதே போல பொக்கிஷங்களை தவிர்த்து கங்கைநீரை கொண்டு வந்தவர் ராஜேந்திர சோழன் என கூறிய பிரதமர் மோடி, இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழ அரசு நீண்டிருந்தது எனவும் கூறினார். மேலும், சோழர்கள் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டடவியல் அற்புதம் என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முதன்மையாக திகழ சோழர்களே காரணம் எனவும் தெரிவித்தார். திருமூலரின் அன்பே சிவம் கோட்பாட்டை கடைபிடித்தால் உலகில் வன்முறை இருக்காது என தெரிவித்த பிரதமர், திருமூலரின் வழியில்தான் இன்றைய இந்தியா பயணித்து வருகிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2014க்கு பிறகு 600-க்கும் அதிகமான கலை படைப்புகளை மீட்டுள்ளதாகவும், அதில் 36 கலைப் பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை எனவும் தெரிவித்தார். மேலும், ராஜேந்திர சோழன் காலத்தில் கடற்படை வலிமை பெற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையை பேண வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்கு பறைசாற்றியது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவை தாக்கினால் எப்படிப்பட்ட பதிலடி கிடைக்கும் என உணர்த்தியதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் ராஜேந்திர சோழனின் பிரமாண்ட சிலையை நிறுவுவோம் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: Namachivaya Vazhaga Nathanthal Vazhagamodi speechprime minister modiGangaikonda Cholapuram.Chola Empire
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Next Post

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies