மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியினரிடம் ஓவல் மைதான கண்காணிப்பாளர் எதோ கூறியதாகத் தெரிகிறது.
இதனால் கடுப்பான தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.