தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?
Jan 14, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய 3 தீவிரவாதிகளின் உயிரைக் குடித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள்  அமெரிக்காவின் M4 carbine rifle போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியபோதும், தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியுள்ளது இந்திய ராணுவம்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் “ஆப்ரேஷன் மகாதேவ்” பெயரில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது ராணுவம்.

லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் தகவல்தொடர்பு சாதனத்தின் தொழில்நுட்ப சமிக்ஞை, ஹாா்வான் வனப்பகுதியிலிருந்து கிடைக்க, புலி போன்று பதுங்கி பாய்ந்தது ராணுவம்….  24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் 4 பாரா படையினரைக் கொண்ட குழு பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம்  தாக்குதலை அரங்கேற்றியவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட சுலைமான அலியாஸ் ஃபைசல் லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் A-Category கமாண்டராக செயல்பட்டார் என்பதும், பாகிஸ்தான் ராணுவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற SSG படைப்பிரிவில் கமாண்டாவோ பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேபோன்று லஷ்கர்-இ-தொய்பாவின் A-Category தீவிரவாதி ஆஃப்கன், A-grade தீவிரவாதி ஜிப்ரான்  ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட  தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன அமெரிக்காவின் M4 கார்பைன் ரைபிள், இரண்டு ஏகே.47 துப்பாக்கிகள், 17 கையேறி குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக அவர்களிடம் மேற்கத்திய ஆயுதங்கள் கிடைத்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2021ம்  ஆண்டு ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் தாலிபான்களின் கைகளில் சிக்கின. அந்த ஆயுதங்கள் சட்டவிரோத சந்தைகள் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததும், பின்னர் அவை இந்திய எல்லையில் தீவிரவாதிகளுக்குக் கைமாறியதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் M4 Carbine ரைபிள்கள் இலகுவானது என்பதால், காஷ்மீர் போன்ற செங்குத்தான மலைப்பகுதிகள், கரடுமுரடான காட்டுப்பாதைகளில் எடுத்துச் செல்வது எளிதானது, எடைகுறைவானது. இதன் மூலம்  கூடுதல் ஆயுதங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்பதால் தீவிரவாதிகள் இவ்வகை ரைபிள்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் M4 Carbine-னில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதால்,  எந்த சூழ்நிலையிலும் எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கலாம்.

தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள், இந்தியாவின் போர் உத்தியை மறுசீரமைப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் எல்லைகளில் வேலி அமைத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி மற்றும் ஆயுதக்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு போன்றவற்றையும் வலியுறுத்துகிறது.

Tags: india vs pakistanஇந்திய ராணுவம்தீவிரவாதிகள்ஆப்ரேஷன் மகாதேவ்How did the terrorists get the M4 carbine rifle?M4 carbine rifle
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Next Post

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies