முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரம் சிகிச்சைப் பெற்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தார், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.