அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Mar 19, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? என்று  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாரியம்மாள் என்ற மூதாட்டிக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுகவின் அலங்கோல ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக உருக்குலைந்து கிடப்பதற்கான சான்று இது. குறிப்பாக, அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க அந்த அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறும், மருத்துவச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் கூறி தனது தவறை மூடி மறைக்கப் பார்த்துள்ளனர் கோவில்பட்டி அரசு மருத்துவர்கள்.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? எனவே, ஆளும் அரசின் அலட்சியத்தால் தனது கண்பார்வையைத் தொலைத்த திருமதி. மாரியம்மாள் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதோடு, அவர்களின் மேற்படி மருத்துவச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்
வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjpDMKThe government should inspect whether government hospitals have adequate basic facilities - Nainar Nagendran insists!நயினார் நாகேந்திரன்  கேள்வி
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

Next Post

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies