அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 07:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? என்று  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாரியம்மாள் என்ற மூதாட்டிக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுகவின் அலங்கோல ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக உருக்குலைந்து கிடப்பதற்கான சான்று இது. குறிப்பாக, அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க அந்த அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறும், மருத்துவச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் கூறி தனது தவறை மூடி மறைக்கப் பார்த்துள்ளனர் கோவில்பட்டி அரசு மருத்துவர்கள்.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? எனவே, ஆளும் அரசின் அலட்சியத்தால் தனது கண்பார்வையைத் தொலைத்த திருமதி. மாரியம்மாள் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதோடு, அவர்களின் மேற்படி மருத்துவச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்
வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjpDMKThe government should inspect whether government hospitals have adequate basic facilities - Nainar Nagendran insists!நயினார் நாகேந்திரன்  கேள்வி
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

Next Post

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies