பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
Mar 19, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்கு அடியில் மூழ்கிக் காணாமல் போன நகரம் ஒன்று கியூபாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1960ம் ஆண்டுகளில் கியூபாவின் டெல் ரியோ மாகாணத்தில் உள்ள குவானாஹகாபிபப்ஸ் தீபகற்பத்தின் கரையின் மிகப்பெரிய கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில், விவாதங்கள் பல ஆண்டுகளாக நீடித்தே வந்தன.

இந்நிலையில்தான், கடலுக்குள் அடியில் நகரம் போன்ற மிகப்பெரிய கட்டமைப்பு இருப்பதைக் கனடாவைச் சேர்ந்த கடற்பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த கடல் பொறியாளர்களான (Paulina Zelitsky) பௌலினா ஜெலிட்ஸ்கி மற்றும் (Paul Weinzweig) பால் வெயின்ஸ்வீக் இருவரும்,  கியூபாவின் கடல்தளத்தை வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2001ம் ஆண்டு சோனார் ஸ்கேன்கள் உதவியுடன் கடல் தளத்தைப் பார்வையிட்டபோது, 2000 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் நகரத்தைப் போன்ற ஒரு கட்டமைப்பு ஒன்று அவர்களது கண்களில் சிக்கியது.

பிரமீடுகள், சாலைகள், கட்டடங்கள் என ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருந்த கட்டமைப்பு  அதன் நம்பகத்தன்மை பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. 6000 ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, பண்டைய நாகரிகத்தின் சான்றா அல்லது இயற்கையாக உருவானதா என்ற இருவேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த அமைப்பு கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிப்பு அல்லது நிலவியல் செயல்பாடுகளால் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மர்மம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் இதனை மறுத்துள்ள கடற்பொறியாளர் ஜெலிட்ஸ்கி, மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு அற்புதமான அமைப்பு என்றும், இது ஒரு பெரிய நகர்ப்புற மையமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீரில் மூழ்கிய இந்த அமைப்பு உண்மையில் பழங்கால நகரத்தின் சான்றாக இருக்குமாயின்,மனித நாகரிகம் உண்மையிலேயே எவ்வளவு பழமையாக இருந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பை புவியியல் ஆய்வாளர்களிடையே எழுப்பியுள்ளது. எகிப்திய பிரமிடுகளை விடப் பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மனித வரலாற்றை மாற்றியமைக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

Tags: Older than the pyramids?: 6000-year-old city discovered6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

Next Post

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்!

Related News

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies