விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் - கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!
Nov 3, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தின் பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு மதுரை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன வசதியும், மேலூர், வெள்ளலூர், கீழவளவு, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒருபோக பாசனமும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சாகுபடிக்கு ஆதாரமான பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாகக் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒத்தக்கடை நகர் பகுதியில் செல்லும் இந்த பாசன கால்வாய்களில் மதுரை மாநகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும் பாசன கால்வாயில் கொட்டப்படுவதால் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மருத்துவக் கழிவுகளும், மது பாட்டில்களும் அதிகளவு காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்தின் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலர் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் நிலை விளைநிலங்களை விற்பனை மனைகளாக மாற்றும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அக்கால்வாய்களை தூர்வாராவதோடு, இதுபோன்ற கழிவுகள் கலக்காவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: tn agricultureவிவசாயத்தை கைவிடும் விவசாயிகள்நிலத்தடி நீர் பாதிப்புFarmers abandoning agriculture: Groundwater is being affected by sewage flowing into irrigation canals
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Next Post

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies