விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் - கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தின் பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு மதுரை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன வசதியும், மேலூர், வெள்ளலூர், கீழவளவு, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒருபோக பாசனமும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சாகுபடிக்கு ஆதாரமான பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாகக் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒத்தக்கடை நகர் பகுதியில் செல்லும் இந்த பாசன கால்வாய்களில் மதுரை மாநகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும் பாசன கால்வாயில் கொட்டப்படுவதால் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மருத்துவக் கழிவுகளும், மது பாட்டில்களும் அதிகளவு காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்தின் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலர் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் நிலை விளைநிலங்களை விற்பனை மனைகளாக மாற்றும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அக்கால்வாய்களை தூர்வாராவதோடு, இதுபோன்ற கழிவுகள் கலக்காவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: tn agricultureவிவசாயத்தை கைவிடும் விவசாயிகள்நிலத்தடி நீர் பாதிப்புFarmers abandoning agriculture: Groundwater is being affected by sewage flowing into irrigation canals
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Next Post

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies