விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் - கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!
Aug 2, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தின் பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்கு மதுரை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளந்திரி, சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன வசதியும், மேலூர், வெள்ளலூர், கீழவளவு, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஒருபோக பாசனமும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சாகுபடிக்கு ஆதாரமான பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாகக் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒத்தக்கடை நகர் பகுதியில் செல்லும் இந்த பாசன கால்வாய்களில் மதுரை மாநகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும் பாசன கால்வாயில் கொட்டப்படுவதால் விவசாயத்திற்குச் செல்லும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மருத்துவக் கழிவுகளும், மது பாட்டில்களும் அதிகளவு காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்தின் மகசூலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பலர் விவசாயத்தை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், பாசனக் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் நிலை விளைநிலங்களை விற்பனை மனைகளாக மாற்றும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அக்கால்வாய்களை தூர்வாராவதோடு, இதுபோன்ற கழிவுகள் கலக்காவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: நிலத்தடி நீர் பாதிப்புFarmers abandoning agriculture: Groundwater is being affected by sewage flowing into irrigation canalstn agricultureவிவசாயத்தை கைவிடும் விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

Next Post

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies