எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக  இந்தியா தனது இராணுவ கட்டமைப்பை அதிநவீனமாக்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து ஆயுத ருத்ரா படையணிகள், இலகுரக பைரவ் கமாண்டோக்கள் மற்றும் ட்ரோன் பொருத்தப்பட்ட காலாட்படை பிரிவுகளை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.  அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமைதிக்கான வாய்ப்பை வழங்கியும்,ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான்  கோழைத்தனமாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது. வீரத்தின் முழக்கமான ஆப்ரேஷன் சிந்தூர்- இந்திய இராணுவத்தின் தேசப் பாதுகாப்பின் உறுதிப்பாட்டை  வெளிப்படுத்தியது.

அதேநேரம், தனது இராணுவ கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளையும் இந்தியா தெரிந்து கொண்டது.   தனித்தனியாக  ஆயுதங்களை நம்பியிருந்ததால்  பதிலடி கொடுப்பதற்கு அதிகம் நேரம் தேவைப்பட்டது.

இந்த அனுபவம், இராணுவத்தை மிகவும் ஒருங்கிணைந்த கூட்டாண்மைக்குத் தள்ளியுள்ளது. காலாட்படை-கனரக அமைப்புகளை நம்புவதற்குப் பதிலாக, விரைவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளை இந்திய இராணுவம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் இராணுவம் அதன் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் வலிமையான போர் தயார்நிலையை  உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றிநாளில், இந்திய இராணுவத்தை எதிர்காலத்திலும்  வெற்றிப் படையாக நவீனமயமாக்கும் வகையில் முக்கிய அறிவிப்புக்களை இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி  அறிவித்துள்ளார்.

காலாட்படை, பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகளில் பட்டாலியன் அளவில் ட்ரான்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு  அமைப்புகளை ஒருங்கிணைப்பது இந்த புதிய அறிவிப்பின் நோக்கமாகும். அதாவது, ருத்ரா படைப்பிரிவுகளை உருவாக்குவது இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாகும்.

ஏற்கனவே சில படைப் பிரிவுகள்  ட்ரோன்களைக் கொண்டிருந்தாலும், அவை தற்போது துணை அமைப்புகளாகவே  கருதப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்களே ட்ரோன்களை இயக்க வேண்டியுள்ளது. அதனால், ராணுவ வீரர்களின் வழக்கமான கடமைகளைச்  செய்ய முடியாமல்  போகின்றன. ஆகவே இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.

ஒவ்வொரு படைப் பிரிவிலும் இனி ஒரு பிரத்யேக ட்ரோன் அமைப்பு இருக்கும் என்றும், ஒரு பிரிவுக்கு சுமார் 70 ட்ரோன் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது. காலாட்படை, டாங்கிகள், பீரங்கிகள், இயந்திரமயமாக்கப்பட்ட படைகள், சிறப்புப் படைகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிரந்தர அனைத்து ஆயுதப் போர் பிரிவுகளும் மேம்படுத்தப்படுகின்றன.

எல்லைகளில் விரைவான தாக்குதல் நடவடிக்கைகளுக்காக, போர் தயார்நிலையை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு, ருத்ரா படைப்பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளன. ஒருங்கிணைந்த, அனைத்து ஆயுத அமைப்புகளும் நிலப்பரப்புகளில் தன்னிச்சையாகச்  செயல்படும் நோக்கத்தில் இந்த ருத்ரா படைப் பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ருத்ரா படைப்பிரிவுகளுடன், புதிய பைரவ் லைட் கமாண்டோ பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

பைரவ் பிரிவுகள் வழக்கமான காலாட்படையிலிருந்து, 30 லைட் கமாண்டோ படைப் பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளன. ருத்ரா மற்றும் பைரவ் பிரிவுகளை உருவாக்கிய இந்திய இராணுவத்தை எதிர்கால போர்க்களத்துக்கு ஏற்றதாக உருமாறியுள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் ட்ரோன் படைப்பிரிவுகள் மற்றும் ஸ்மார்ட் பீரங்கிகள் என நவீன போருக்கு இராணுவமும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும்,  ட்ரோன் படைப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பீரங்கிகளின் துப்பாக்கிச் சக்தி, திவ்யாஸ்திர பேட்டரிகள் மற்றும் அலைந்து திரியும் வெடிமருந்து பேட்டரிகள் மூலம் பல மடங்கு பெருக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் வான் பாதுகாப்புகளும் விரிவுபடுத்தப்படுகிறது. சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்காக ஆகாஷ் பிரைம் தரையிலிருந்து வான் ஏவுகணைகளின் இரண்டு புதிய படைப்பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அமைப்புகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை 25 கிலோமீட்டர் தூரம் வரை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராணுவத்துக்கும், இந்திய விமானப்படைக்கும் பயன்படும் வகையில், கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் 36,000 கோடி செலவில் வாங்கப்படுகின்றன. இவை அந்நிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மொபைல், குறுகிய தூரப் பாதுகாப்பை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.

புத்திசாலித்தனத்துடனும், அதிவேகமாகவும், செயல்படுவதற்கு ஏற்ப,  தொழில்நுட்பத்திலும்  நவீனமயமாகி வரும் இந்திய இராணுவம், எதிர்கால போருக்கு முழுமையாகத் தயாராகி விட்டது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: indian armyஇந்திய ராணுவம்Ready for future war: Indian Army creates new force formationsபோருக்கு தயார்
ShareTweetSendShare
Previous Post

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies