மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!
Jan 14, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

சில நோய்களின் பெயரைக் கேட்டாலே மனிதக்குலம் குலை நடுங்கும். அத்தகைய நோய்களில் முதன்மையானது புற்றுநோய். உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவும், ரஷ்யாவும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Memorial Sloan கேட்டரிங் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்தாண்டு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தது. நோயாளிகளுக்கு அதனைச் செலுத்தி சோதனை செய்ததில் புற்றுநோய் குணமானதாகவும் அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கீமோதெரபி வழங்காமல்,  dostarlimab என்ற மருந்தை மட்டும் கொடுத்து புற்றுநோய் குணமாக்கப்பட்டது.

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே வைத்து அந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை முழுமையாக அறியப் பெரிய எண்ணிக்கையில் சோதனை செய்ய வேண்டியது அவசியம். இப்படி, புற்றுநோய் மருந்து தொடர்பான ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்தான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தை கிட்டவிட்ட கண்டுபிடித்து விட்டதாகவும், இறுதிக்கட்ட சோதனை முடிந்துவிட்டால், நோயாளிகளுக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள mRNA என்ற அந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த இறுதி சோதனை தொடங்கும் எனவும், தடுப்பூசியைப் பெறவுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோய் தடுப்பூசி, புரதங்கள் அல்லது உயிரணுக்களால் உருவாகும் ஆன்டிஜென்களை அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், காசநோயைப் போல அம்மையைப் போலப் புற்றுநோயும் முழுமையாக ஒழிக்கப்படும்.

Tags: மருத்துவ உலகில் புரட்சிrussiaரஷ்யாRevolution in the medical world: Human trials of cancer vaccine beginபுற்றுநோய் தடுப்பூசி
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

Next Post

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies