மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!
Sep 27, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

சில நோய்களின் பெயரைக் கேட்டாலே மனிதக்குலம் குலை நடுங்கும். அத்தகைய நோய்களில் முதன்மையானது புற்றுநோய். உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவும், ரஷ்யாவும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Memorial Sloan கேட்டரிங் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்தாண்டு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தது. நோயாளிகளுக்கு அதனைச் செலுத்தி சோதனை செய்ததில் புற்றுநோய் குணமானதாகவும் அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கீமோதெரபி வழங்காமல்,  dostarlimab என்ற மருந்தை மட்டும் கொடுத்து புற்றுநோய் குணமாக்கப்பட்டது.

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே வைத்து அந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை முழுமையாக அறியப் பெரிய எண்ணிக்கையில் சோதனை செய்ய வேண்டியது அவசியம். இப்படி, புற்றுநோய் மருந்து தொடர்பான ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்தான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தை கிட்டவிட்ட கண்டுபிடித்து விட்டதாகவும், இறுதிக்கட்ட சோதனை முடிந்துவிட்டால், நோயாளிகளுக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள mRNA என்ற அந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த இறுதி சோதனை தொடங்கும் எனவும், தடுப்பூசியைப் பெறவுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோய் தடுப்பூசி, புரதங்கள் அல்லது உயிரணுக்களால் உருவாகும் ஆன்டிஜென்களை அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், காசநோயைப் போல அம்மையைப் போலப் புற்றுநோயும் முழுமையாக ஒழிக்கப்படும்.

Tags: மருத்துவ உலகில் புரட்சிrussiaரஷ்யாRevolution in the medical world: Human trials of cancer vaccine beginபுற்றுநோய் தடுப்பூசி
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

Next Post

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies