பல ஆயிரம் கோடி "அவுட்" : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!
Sep 24, 2025, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் அனைத்துக் கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்பது தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில்,  அப்பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்காகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கல் ஊராட்சியின் தென்றல் நகர் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பயணித்து தங்களுக்குத் தேவையான குடிநீரை எடுத்துவரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவகல்ம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என மனு கொடுக்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் பகுதிக்கும் குடிநீர் குழாய்கள் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் துளியளவும் கண்டுகொள்ளவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

நாடு முழுவதும் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் மட்டும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை எனப் புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இனியும் இதே நிலை நீடித்தால் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு, குடும்ப அட்டைகளை வீதியில் வீசி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்

மாநில மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசு நிர்வாகம், அவர்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் எப்படி உயர்த்த முடியும் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், மத்திய அரசு நிதி ஒதுக்கிய போதிலும் அதற்கான பணியை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக அரசுThousands of crores "out": Tamil Nadu government fails to implement Jaljeevan projectபல ஆயிரம் கோடி "அவுட்"
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Related News

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies