தாம்பரம் அருகே நல்ல முறையில் இருந்த கான்கிரீட் சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் மீண்டும் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டசெங்கேணி அம்மன் கோயில் தெருவில் நல்ல முறையில் இருந்த கான்கிரீட் சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் மீண்டும் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ஒப்பந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.