மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!
Jan 14, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை  பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே பின்பற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சத்தியமங்கலம், ஆண்டார் கொட்டாரம், கல்மேடு, இளமனூர், ஒத்தவீடு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாண்டியன்கோட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் கருப்பாயூரணி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகளின் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கல்குவாரி பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ இல்லாத காரணத்தினால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெருவிளக்கு கூட இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவதோடு, மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளும் குவாரிகளின் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 15க்கும் அதிகமானோர் இப்பள்ளங்களில் விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சாலை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாரிகள் அமைக்க அனுமதிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே மீறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும் விபத்து அரங்கேறும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uncovered pits kill lives: Stone quarry rules blown upஉயிர் பலிகல் குவாரி விதிகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

Next Post

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies