மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!
Nov 16, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை  பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே பின்பற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சத்தியமங்கலம், ஆண்டார் கொட்டாரம், கல்மேடு, இளமனூர், ஒத்தவீடு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாண்டியன்கோட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் கருப்பாயூரணி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகளின் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கல்குவாரி பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ இல்லாத காரணத்தினால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெருவிளக்கு கூட இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவதோடு, மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளும் குவாரிகளின் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 15க்கும் அதிகமானோர் இப்பள்ளங்களில் விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சாலை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாரிகள் அமைக்க அனுமதிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே மீறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும் விபத்து அரங்கேறும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uncovered pits kill lives: Stone quarry rules blown upஉயிர் பலிகல் குவாரி விதிகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

Next Post

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Related News

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies