மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!
Jul 23, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை  பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே பின்பற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சத்தியமங்கலம், ஆண்டார் கொட்டாரம், கல்மேடு, இளமனூர், ஒத்தவீடு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாண்டியன்கோட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் கருப்பாயூரணி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகளின் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கல்குவாரி பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ இல்லாத காரணத்தினால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெருவிளக்கு கூட இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவதோடு, மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளும் குவாரிகளின் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 15க்கும் அதிகமானோர் இப்பள்ளங்களில் விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சாலை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாரிகள் அமைக்க அனுமதிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே மீறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும் விபத்து அரங்கேறும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uncovered pits kill lives: Stone quarry rules blown upஉயிர் பலிகல் குவாரி விதிகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

Next Post

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Related News

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies