திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற பெண் ஒருவரைச் சித்திரவதை செய்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் மீது புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகியின் அட்டூழியத்தால் சித்ரவதைக்கு உள்ளாகி வரும் ஆதரவற்ற பெண் குறித்தும் அவர் படும் துயரங்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தமிழ்செல்விக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் தமிழ்செல்வி அருகில் இருக்கும் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று  குழந்தைகளின் பசியை போக்குவதோடு படிக்கவும் வைத்து வருகிறார். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வசித்து வந்த கூரை வீட்டிற்கு மின்சார வசதி கேட்டு தமிழ்செல்வி அளித்த மனு கூரை வீடு என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜூஸ் கம்பெனி மட்டுமல்லாது பக்கத்து வீட்டிற்கும் வேலைக்குச் சென்று சேர்த்த பணத்தில் தகர வீடு ஒன்றைக் கட்டி முடித்த தமிழ் செல்வி, அதற்கு மின்சார வசதி கேட்டு கோரிக்கை வைத்த போது பட்டா இருந்தால் தான் மின்சார வழங்க முடியும் என அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.  பட்டாவை வழங்க உதவுமாறு மனு கொடுக்க வந்த தமிழ்செல்வியை தன் வீட்டிற்கு வந்து வேலை செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலையின் கணவருமும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான தட்டரஹள்ளி நாகராஜ் நாகராஜன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

தமது வீட்டிற்கு வேலைக்கு வந்தால் உதவி செய்கிறேன் என மீண்டும் மீண்டும் நாகராஜ், தமிழ்செல்வியை வற்புறுத்தியுள்ளார். உங்கள் வீட்டில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தம்மால் குழந்தைகளைப் பார்க்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்த தமிழ் செல்வியை நாகராஜ் மிரட்டத் தொடங்கியுள்ளார்.  என் வீட்டிற்கு வேலைக்கு வராத நீ எப்படி நிம்மதியாக வாழ முடியும் எனச் சவால்விட்ட நாகராஜ், தமிழ்செல்வி இல்லத்தின் முன்பாக அடியாட்களை வைத்து மதுபான பாட்டில்களை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திமுக அவைத் தலைவர் நாகராஜின் அடியாட்களிடமிருந்து தமது குழந்தைகளைப் பாதுகாக்கப் பகலில் வேலைக்குச் சென்று வந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டே இருப்பதாக தமிழ்செல்வி கண்ணீர் வடிக்கிறார். இரவுபகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற ஆதரவற்ற பெண் ஒருவரை திமுக பிரமுகர் நாகராஜ் நடத்தியிருக்கும் விதம் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: பெண்ணுக்கு சித்ரவதைDMKகிருஷ்ணகிரிDMK executive's atrocity: Torture of a woman who went for helpதிமுக நிர்வாகியின் அட்டூழியம்
ShareTweetSendShare
Previous Post

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies