திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற பெண் ஒருவரைச் சித்திரவதை செய்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் மீது புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகியின் அட்டூழியத்தால் சித்ரவதைக்கு உள்ளாகி வரும் ஆதரவற்ற பெண் குறித்தும் அவர் படும் துயரங்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தமிழ்செல்விக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் தமிழ்செல்வி அருகில் இருக்கும் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று  குழந்தைகளின் பசியை போக்குவதோடு படிக்கவும் வைத்து வருகிறார். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வசித்து வந்த கூரை வீட்டிற்கு மின்சார வசதி கேட்டு தமிழ்செல்வி அளித்த மனு கூரை வீடு என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜூஸ் கம்பெனி மட்டுமல்லாது பக்கத்து வீட்டிற்கும் வேலைக்குச் சென்று சேர்த்த பணத்தில் தகர வீடு ஒன்றைக் கட்டி முடித்த தமிழ் செல்வி, அதற்கு மின்சார வசதி கேட்டு கோரிக்கை வைத்த போது பட்டா இருந்தால் தான் மின்சார வழங்க முடியும் என அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.  பட்டாவை வழங்க உதவுமாறு மனு கொடுக்க வந்த தமிழ்செல்வியை தன் வீட்டிற்கு வந்து வேலை செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலையின் கணவருமும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான தட்டரஹள்ளி நாகராஜ் நாகராஜன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

தமது வீட்டிற்கு வேலைக்கு வந்தால் உதவி செய்கிறேன் என மீண்டும் மீண்டும் நாகராஜ், தமிழ்செல்வியை வற்புறுத்தியுள்ளார். உங்கள் வீட்டில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தம்மால் குழந்தைகளைப் பார்க்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்த தமிழ் செல்வியை நாகராஜ் மிரட்டத் தொடங்கியுள்ளார்.  என் வீட்டிற்கு வேலைக்கு வராத நீ எப்படி நிம்மதியாக வாழ முடியும் எனச் சவால்விட்ட நாகராஜ், தமிழ்செல்வி இல்லத்தின் முன்பாக அடியாட்களை வைத்து மதுபான பாட்டில்களை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திமுக அவைத் தலைவர் நாகராஜின் அடியாட்களிடமிருந்து தமது குழந்தைகளைப் பாதுகாக்கப் பகலில் வேலைக்குச் சென்று வந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டே இருப்பதாக தமிழ்செல்வி கண்ணீர் வடிக்கிறார். இரவுபகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற ஆதரவற்ற பெண் ஒருவரை திமுக பிரமுகர் நாகராஜ் நடத்தியிருக்கும் விதம் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: பெண்ணுக்கு சித்ரவதைDMKகிருஷ்ணகிரிDMK executive's atrocity: Torture of a woman who went for helpதிமுக நிர்வாகியின் அட்டூழியம்
ShareTweetSendShare
Previous Post

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies