சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நிலவு குறித்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என்ற 3  விண்கலன்களை இந்தியா இதுவரை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் அதன் ஆர்ப்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து நிலவு குறித்த முக்கிய தகவல்களை அது பூமிக்கு அனுப்பி வருகிறது.

நிலவு பூமிக்கு அருகில் வரும்போது, அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதைச் சந்திரயான்-2 விண்கலம்தான் அண்மையில் கண்டுபிடித்தது. இந்த தகவல் மூலம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவிற்குச் செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவின் தரையில் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான புகைப்படத்தைச் சந்திரயான்-2 தற்போது அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம், Intuitive Machines என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு ஒரு லேண்டரை அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில் IM-2 லூனார் என்ற அந்த லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததால் அதனால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை.

மார்ச் 7ம் தேதி அந்த லேண்டர் விபத்துக்குள்ளானது குறித்த சந்திரயான்-2 புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. Orbiter High Resolution Camera-வில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் லேண்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான துல்லியமான பல தகவல்களை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த புகைப்படத்தை ஜெர்மனியில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்தும், இத்தகைய பள்ளங்கள் உள்ள பகுதிகளில் லேண்டர்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் இந்த புகைப்படங்கள் புதிய தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,
சந்திரயான்-2 எடுத்த இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: நிலவுvISROஇஸ்ரோNew photo sent by Chandrayaan-2சந்திரயான்-2
ShareTweetSendShare
Previous Post

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies