அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?
Jan 14, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவின் பரம எதிரியான பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் இணைந்து நிற்பது தெற்காசியப் புவி அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின்  முக்கிய நாடாக உள்ளது. 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன்  வளர்ந்து வரும் பொருளாதாரமாக விளங்கும் பிலிப்பைன்ஸ், அடிக்கடி சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் ஒரு நாடாக உள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியா-பிலிப்பைன்ஸ், இருநாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் உள்துறை பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வேளாண்மை, சுகாதாரம், மருந்துத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல துறைகளில் வலுவான கூட்டுறவை மேற்கொண்டுள்ளன.

மேலும், இந்தியாவின் ASEAN-உடனான விரிவான மூலதன உறவுத் திட்டம் (Comprehensive Strategic Partnership) வழியாகப் பிராந்திய மட்டத்திலும் பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் செயல்பட்டு வருகிறது.  ஏற்கெனவே, அமெரிக்காவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள உள்ள பிலிப்பைன்ஸ், எந்த நேரத்திலும் அமெரிக்கா நழுவலாம் என்ற நிலையில், இந்தியா தான் நம்பகமான நாடு என்று இந்தியாவுடன் நெருங்கி வந்துள்ளது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட  பிலிப்பைன்ஸ் முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இந்தியாவுடன் இணைந்து  பிலிப்பைன்ஸ் முதன்முறையாக தென்சீனக் கடலில் கூட்டுக் கடல் பயிற்சியை நடத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துடன்  கூட்டுப் பயிற்சிகள் நடத்த விரும்புவதாகவும் பிலிப்பைன்ஸ் தளபதி ஜெனரல் ரோமியோ ப்ராவ்னர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் மீனவர்களையும், பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்களையும்  வழக்கமாகத் துன்புறுத்தும் சீனக்கடற்படை ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் நடந்த இந்தப் போர் பயிற்சி சீனாவுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை என்றே பார்க்கப் படுகிறது.

தனது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Akash-1S  ஏவுகணையை இந்தியாவிடமிருந்து வாங்க பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது. ஏற்கெனவே, கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலர் மதிப்பில் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ்  கையெழுத்திட்டுள்ளது.

இந்திய பசிபிக் பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டின் அடிப்படையில் உத்திசார் கூட்டாண்மையை இருநாடுகளும் ஏற்படுத்தியுள்ளன.

காலநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல் போன்ற நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான அடித்தளமாக இது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: இந்தியா - பிலிப்பைன்ஸ்americausaChina is trembling with fear: Why is the Philippines joining hands with India?அஞ்சி நடுங்கும் சீனா
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Next Post

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies