அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
Aug 9, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Aug 9, 2025, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்புமணி தலைமையில் இன்று நடக்கவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று கட்சிப் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி, நீதிபதியின் அறையில் அன்புமணி நேரில் ஆஜராகினார். உடல்நலக்குறைவு காரணமாக காணொலி மூலம் ராமதாஸ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது, பொதுக்குழுவை கூட்ட கட்சி தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், பாமக நிறுவனர் வழிகாட்டுதல்படி பொதுக்குழு நடத்தப்படும் எனவும் அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கட்சியின் உள்விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.இந்த தீர்ப்பு மூலம் திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

Tags: Justice Anand Venkateshmadras high courtmamallapurampmk founder ramadossPMK leader AnbumaniPMK general body meeting tcaseAnbumani appeared
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் வரி விதிப்பு ஆட்டோ மொபைல் துறையை பாதிக்காது – நிதின் கட்கரி உறுதி!

Next Post

விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Related News

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

திருவள்ளூர் : மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பெண்கள் புகார்!

தென்காசி : மதுப்பழக்கத்தை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட வரிச்சியூர் செல்வம்!

ஆடி மாத பெளர்ணமி – அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கனமழை – விமான சேவை பாதிப்பு!

புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் விழா!

இன்றைய தங்கம் விலை!

கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புவனகிரியில் அரசு ஊழியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

மரக்காணம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலைக்கு ஒப்புதல் – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

புழல் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் வாக்குவாதம்

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை!

ஆடித் திருவிழா – சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies