சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை, ஒன்றரை வாரத்திற்குப் பிறகு கும்பகோணத்தில் மீட்கப்பட்டது.
துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒன்றரை வயது குழந்தை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கை தீவிரப்படுத்திய போலீசார், தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரைக் கும்பகோணத்தில் வைத்து கைது செய்து குழந்தையைப் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.