அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
Nov 15, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், இலக்குகளைத் தெறிக்க விடும் திறன் என எல்லையைப் பாதுகாக்க கர்ஜிக்கும் சிங்கங்களாக அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது இந்திய விமானப்படை. இந்தியாவின் இதயமாக விளங்கும் விமானப்படை, ஒவ்வொரு நொடியும் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் என்ற தலையாய பணியையும் சிறம் மேற்கொண்டு செய்து வருகிறது. அதனை விவரிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ஓட்டம்பிடிக்க, 13 நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் என்ற புதிய நாடும் உதயமானது.

ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடத்தப்பட்ட கார்கில் போரில் இந்திய போர் விமானங்கள்  வான்வழியாக நடத்திய தாக்குதல்கள், பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணியாக இருந்தது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படை வழியாகத் தாக்கி அழித்தது.இதில் 300 தீவிரவாதிகள் கொன்று குவித்த இந்திய விமானப்படை புல்வாமா தாக்குதலுக்குப் பழிதீர்த்தது.

அதற்குப் பிறகு, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி என 9 தீவிரவாத முகாம்களைத் தகர்த்தது இந்திய விமானப்படை. அதுமட்டுமல்லாமல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு காலங்களில் விமானப்படை முன்வந்து உதவுகிறது. மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட சவாலான பணிகளை முன்னின்று நடத்துகிறது.

தேசத்தைக் காக்க ஒவ்வொரு நொடியும் பணியாற்றி வருவதையும், எத்தகையை தாக்குதலையும் எதிர்கொள்ளும திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளது என்பதையும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Tags: indian armyஇந்திய விமானப்படைindian army news todayThe Indian Air Force is incredibly powerful1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
ShareTweetSendShare
Previous Post

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

Next Post

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

Related News

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies