அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், இலக்குகளைத் தெறிக்க விடும் திறன் என எல்லையைப் பாதுகாக்க கர்ஜிக்கும் சிங்கங்களாக அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது இந்திய விமானப்படை. இந்தியாவின் இதயமாக விளங்கும் விமானப்படை, ஒவ்வொரு நொடியும் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் என்ற தலையாய பணியையும் சிறம் மேற்கொண்டு செய்து வருகிறது. அதனை விவரிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ஓட்டம்பிடிக்க, 13 நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் என்ற புதிய நாடும் உதயமானது.

ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடத்தப்பட்ட கார்கில் போரில் இந்திய போர் விமானங்கள்  வான்வழியாக நடத்திய தாக்குதல்கள், பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணியாக இருந்தது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படை வழியாகத் தாக்கி அழித்தது.இதில் 300 தீவிரவாதிகள் கொன்று குவித்த இந்திய விமானப்படை புல்வாமா தாக்குதலுக்குப் பழிதீர்த்தது.

அதற்குப் பிறகு, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி என 9 தீவிரவாத முகாம்களைத் தகர்த்தது இந்திய விமானப்படை. அதுமட்டுமல்லாமல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு காலங்களில் விமானப்படை முன்வந்து உதவுகிறது. மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட சவாலான பணிகளை முன்னின்று நடத்துகிறது.

தேசத்தைக் காக்க ஒவ்வொரு நொடியும் பணியாற்றி வருவதையும், எத்தகையை தாக்குதலையும் எதிர்கொள்ளும திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளது என்பதையும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Tags: indian armyஇந்திய விமானப்படைindian army news todayThe Indian Air Force is incredibly powerful1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
ShareTweetSendShare
Previous Post

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

Next Post

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies