இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!
Sep 30, 2025, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் சம்பவங்களைக் குறைக்கச் சாட்டையைச் சுழற்றவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கான திட்டங்களையும் டிரம்ப் கையில் எடுத்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்குப் பெருமைக்கும், தேசபக்திக்கும் அடையாளமாகத் திகழும் வாஷிங்டன் டி.சி., சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பு வாசிகள், அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதி என்று கருதப்பட்டது. ஆனால் தற்போதோ நிலைமையே வேறு.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை விட  மூன்று மடங்கு அதிகமாகவும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழுள்ள கியூபா தலைநகர் ஹவானாவை விட 18 மடங்கு அதிகமான கொலைகள் வாஷிங்டனில் நடைபெறுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே புலம்பும் அளவுக்கு குற்றச் சம்பங்கள் அதிகரித்துள்ளன…

வாஷிங்டனில் கடந்த 2012ம் ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு 13.9 சதவிகிதமாக இருந்த கொலை விகிதம், 2024ம் ஆண்டு 23.3 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நியூயார்க் நகரை விட ஆறு மடங்கு அதிகம் என்றும், அட்லாண்டா, சிகாகோ மற்றும காம்ப்டன் பகுதிகளை விட அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கொலை மட்டுமல்ல, வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் கார் திருட்டு சம்பவங்களும் அதிகரித்திருப்பது வாஷிங்டனை உலகின் மோசமான நகரப் பட்டியலுக்குள் தள்ளியுள்ளது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் வாஷிங்டன் பாதுகாப்பான பகுதி அல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தலைநகருக்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வாஷிங்டன் காவல்துறையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் டிரம்ப்…  வாஷிங்டனில் அவசர நிலை நிலவும்போது, அமெரிக்க அதிபர் நகரத்தின் காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் எடுக்க அதிகாரம் அளிக்கும் “District of Columbia Home Rule Act” சட்டப் பிரிவு 740-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

நகரக் காவல் துறையை 30 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு செனட் உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த புதிய நடவடிக்கை, உள்ளூர் நிர்வாகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கியுள்ளது.

வாஷிங்டனில் இருந்து வீடில்லா மக்களை நகர மையத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

இந்த நடவடிக்கைக்குச் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், இது நகரத்தின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என விமர்சகர்கள்  கூறிவந்தனர். இந்த நிலையில், காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள டிரம்ப், வாஷிங்டனை குற்றமற்ற நகரமாக மாற்றுவாரா, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: D.C. under Trump's control has more murders than IslamabadamericausawashingtonusDonald Trump news today
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies