இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!
Jan 14, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் சம்பவங்களைக் குறைக்கச் சாட்டையைச் சுழற்றவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கான திட்டங்களையும் டிரம்ப் கையில் எடுத்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்குப் பெருமைக்கும், தேசபக்திக்கும் அடையாளமாகத் திகழும் வாஷிங்டன் டி.சி., சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பு வாசிகள், அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதி என்று கருதப்பட்டது. ஆனால் தற்போதோ நிலைமையே வேறு.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை விட  மூன்று மடங்கு அதிகமாகவும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழுள்ள கியூபா தலைநகர் ஹவானாவை விட 18 மடங்கு அதிகமான கொலைகள் வாஷிங்டனில் நடைபெறுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே புலம்பும் அளவுக்கு குற்றச் சம்பங்கள் அதிகரித்துள்ளன…

வாஷிங்டனில் கடந்த 2012ம் ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு 13.9 சதவிகிதமாக இருந்த கொலை விகிதம், 2024ம் ஆண்டு 23.3 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நியூயார்க் நகரை விட ஆறு மடங்கு அதிகம் என்றும், அட்லாண்டா, சிகாகோ மற்றும காம்ப்டன் பகுதிகளை விட அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கொலை மட்டுமல்ல, வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் கார் திருட்டு சம்பவங்களும் அதிகரித்திருப்பது வாஷிங்டனை உலகின் மோசமான நகரப் பட்டியலுக்குள் தள்ளியுள்ளது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் வாஷிங்டன் பாதுகாப்பான பகுதி அல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தலைநகருக்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வாஷிங்டன் காவல்துறையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் டிரம்ப்…  வாஷிங்டனில் அவசர நிலை நிலவும்போது, அமெரிக்க அதிபர் நகரத்தின் காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் எடுக்க அதிகாரம் அளிக்கும் “District of Columbia Home Rule Act” சட்டப் பிரிவு 740-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

நகரக் காவல் துறையை 30 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு செனட் உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த புதிய நடவடிக்கை, உள்ளூர் நிர்வாகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கியுள்ளது.

வாஷிங்டனில் இருந்து வீடில்லா மக்களை நகர மையத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

இந்த நடவடிக்கைக்குச் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், இது நகரத்தின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என விமர்சகர்கள்  கூறிவந்தனர். இந்த நிலையில், காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள டிரம்ப், வாஷிங்டனை குற்றமற்ற நகரமாக மாற்றுவாரா, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: D.C. under Trump's control has more murders than IslamabadamericausawashingtonusDonald Trump news today
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies