தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
வாரங்கல்லில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வாரங்கல்லின் எஸ்ஆர் நகர், சகராஷி குந்தா, கரிமாபாத், சிவநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனிடையே இன்றும் நாளையும் தெலங்கானாவில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.