"ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்" : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!
Nov 16, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தெரு நாய் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எம்.பி மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது மக்களிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..

தேசிய தலைநகரான டெல்லியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய் கடியால் பாதிக்கப்படுவது குறித்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நாய்களுக்கான காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக தெரு நாய் கடி பிரச்சனையை மிக மோசமான நிலை என விவரித்த நீதிபதிகள், இளம் குழந்தைகள் எந்த வகையிலும் தெரு நாய் கடிக்கு ஆளாகக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக விளக்கமளித்தனர்.

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் விலங்கு நல ஆர்வலர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விலங்கு நல ஆர்வலர்கள் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதற்கிடையே டெல்லி ஹனுமான் மந்திர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற, எம்.பி மேனகா காந்தியின் சகோதரியும், விலங்கு நல ஆர்வலருமான அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி யூ-டியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், ரேபிஸ் வைரஸை வெறும் சோப்பால் கழுவியே அகற்றிவிட முடியும் எனவும், நாய்கள் மட்டுமல்ல சூடான ரத்தம் கொண்ட அனைத்து பாலூட்டிகளின் கடியில் இருந்தும் ரேபிஸ் வைரஸ் பரவக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

மூளையைத் தாக்கி படிப்படியாக மரணத்தை விளைவிக்கும் ரேபிஸ் வைரஸ் மிகவும் ஆபத்தானது எனப் பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், அம்பிகா சுக்லாவின் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.

குறிப்பாக ரேபிஸ் வைரஸ் குறித்து அம்பிகா சுக்லா தவறான தகவல்களை பரப்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஒருமித்த மருத்துவ கருத்துக்களைப் புறந்தள்ளும் அம்பிகா சுக்லா, முட்டாள்தனமான கூற்றுக்களை மிகவும் உறுதியுடன் கூறுவதாகவும் பலர் விமர்சித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்னதான் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களுடன் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், உலகில் மனித பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதே அனைத்திலும் பிரதான செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: "Rabies is a harmlessmild virus": Maneka Gandhi's sister sparks controversyசர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி
ShareTweetSendShare
Previous Post

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

Next Post

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

Related News

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies