"ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்" : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!
Aug 6, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் தெரு நாய் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எம்.பி மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது மக்களிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..

தேசிய தலைநகரான டெல்லியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய் கடியால் பாதிக்கப்படுவது குறித்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நாய்களுக்கான காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக தெரு நாய் கடி பிரச்சனையை மிக மோசமான நிலை என விவரித்த நீதிபதிகள், இளம் குழந்தைகள் எந்த வகையிலும் தெரு நாய் கடிக்கு ஆளாகக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக விளக்கமளித்தனர்.

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் விலங்கு நல ஆர்வலர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விலங்கு நல ஆர்வலர்கள் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதற்கிடையே டெல்லி ஹனுமான் மந்திர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற, எம்.பி மேனகா காந்தியின் சகோதரியும், விலங்கு நல ஆர்வலருமான அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி யூ-டியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், ரேபிஸ் வைரஸை வெறும் சோப்பால் கழுவியே அகற்றிவிட முடியும் எனவும், நாய்கள் மட்டுமல்ல சூடான ரத்தம் கொண்ட அனைத்து பாலூட்டிகளின் கடியில் இருந்தும் ரேபிஸ் வைரஸ் பரவக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

மூளையைத் தாக்கி படிப்படியாக மரணத்தை விளைவிக்கும் ரேபிஸ் வைரஸ் மிகவும் ஆபத்தானது எனப் பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், அம்பிகா சுக்லாவின் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.

குறிப்பாக ரேபிஸ் வைரஸ் குறித்து அம்பிகா சுக்லா தவறான தகவல்களை பரப்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஒருமித்த மருத்துவ கருத்துக்களைப் புறந்தள்ளும் அம்பிகா சுக்லா, முட்டாள்தனமான கூற்றுக்களை மிகவும் உறுதியுடன் கூறுவதாகவும் பலர் விமர்சித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்னதான் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களுடன் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், உலகில் மனித பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதே அனைத்திலும் பிரதான செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: "Rabies is a harmlessmild virus": Maneka Gandhi's sister sparks controversyசர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி
Share
Tweet
SendShare
Previous Post

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

Next Post

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies