மேக வெடிப்பால் பேரழிவு - உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்...!
Jun 22, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரழிவை ஏற்படுத்தியுள்ள பெருவெள்ளத்தின் பாதிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி மாபெரும் இயற்கை சீற்றமாக மாறியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இயற்கை பேரழிவின் விளைவாகச் சிம்லா மற்றும் லாஹவுல் ஸ்பிட்டி பகுதியில் உள்ள இரு சிறிய பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகளை மூடும் நிலை உருவாகியுள்ளது.

சிம்லா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம், பல குடியிருப்பு கட்டடங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கவி பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு காவல் நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு பேருந்து நிலையமும் அதனை ஒட்டிய பகுதியிலிருந்த கடைகளும் இந்த இயற்கை பேரழிவுக்கு இரையாகின.

எதிர்பாராத இந்த இயற்கை சீற்றத்தால் கவி, கியாவோ மற்றும் கூட் ஆகிய மூன்று கிராமங்கள் வெளியுலகத்தில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி உயரமான பகுதிகளில் தங்க வைத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலு மற்றும் கின்னௌர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கின்னௌர் மாவட்டத்தில் நிலையற்ற நிலப்பரப்பு மற்றும் வலுவான நீரோட்டங்களுக்கு மத்தியில், ஆற்றின் மறுகரையில் சிறு காயங்களுடன் சிக்கியிருந்த 4 பேரை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள நிலச்சரிவு சம்பவங்கள் மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 20-ம் தேதி முதல் மழை தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிக்கி 240-க்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்த உச்சநீதிமன்றம், இந்த நிலை மேம்படவில்லை என்றால் மொத்த மாநிலமும் காற்றில் மறைந்துபோகக் கூடும் என எச்சரித்திருந்தது.

அத்துடன் சுற்றுலாத் தலங்களில் சுற்றுச்சூழல் அமைப்பைப் பலியாக்கி வருவாய் ஈட்ட முடியாது என எடுத்துரைத்திருந்த நீதிமன்றம், வருவாய் ஈட்டுவது மட்டுமே முக்கியமல்ல என்பதை எடுத்துரைக்க விரும்புவதாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.

Tags: Himachal Pradesh devastated by cloudburst: Indian Army in rescue operation.மீட்பு பணியில் இந்திய ராணுவம்உருக்குலைந்த இமாச்சல பிரதேசம்
ShareTweetSendShare
Previous Post

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Next Post

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies