வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் "சுதர்சன சக்ரா" - பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!
Oct 2, 2025, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Web Desk by Web Desk
Aug 17, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் அயன் டோமைப் போல் இந்தியாவின் வான் பரப்பைப் பாதுகாக்கச் சுதர்சன சக்ரா திட்டம் தயாராகி வருவதாகக் குடியரசு தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பகவான் கிருஷ்ணரின் ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் தயாராகி வரும் இந்த திட்டம் எப்படிச் செயல்படும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கிருஷ்ணரின் சக்திவாய்ந்த ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் புதிய வான் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2035-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டம், வான் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்பட்டு துல்லியமாக எதிர் தாக்குதல் நடத்தும் திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்து புராணங்களின் அடிப்படையில் சுதர்சன சக்ரா என்பது பகவான் விஷ்ணுவின் ஆயுதங்களுள் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை நோக்கி ஏவப்படும் அந்த ஆயுதமானது, அதீத வேகத்தில் இலக்குகளைத் தாக்கி அழித்து, பின் ஏவப்பட்டவரிடமே வந்து சேரும் திறன் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, சக்திவாய்ந்த ஆயுத அமைப்பைக் கொண்டிருக்கும் சுதர்சன சக்ரா திட்டம், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பதோடு மட்டுமின்றி, அவர்கள் மீதும் துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு கவசம் விரிவடைந்துகொண்டே இருக்கும் எனவும், இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக உணர முடியும் என்றும் பிரதமர் மோடி தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நடைமேடைகள், மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்கள், வரும் 2035-ம் ஆண்டிற்குள் தேசியப் பாதுகாப்பு கேடயத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, இது வழக்கமான ராணுவ மண்டலங்களுக்கு அப்பால் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான அரசின் உந்து சக்தியை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் அயன் டோமைப் போல் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்தும் சுதர்சன சக்ரா நம்மைப் பாதுகாத்து நாட்டின் மீது ஒரு பாதுகாப்பு கேடயமாகச் செயல்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சுதர்சன சக்ரா திட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் அளவுக்குச் செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். இந்தியாவின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் ஒருங்கிணைப்பதே சுதர்சன சக்ரா திட்டத்தின் மையமாகும்.

அதன்படி, IACCS என்னும் ஒருங்கிணைக்கப்பட்ட AIR COMMAND மற்றும் CONTROL SYSTEM வலையமைப்பை, ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்துப் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலவை அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதன் மீது துல்லிய தாக்குதலை நடத்தும் ஒரு தடையற்ற வலையமைப்பை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகச் செயல்படவுள்ள சுதர்சன சக்ரா திட்டம், பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

ஃபைபர் ஆப்டிக் அடிப்படையிலான தொலைத்தொடர்பு கட்டமைப்பு கொண்டு வடிவமைக்கப்படவுள்ள IACCS அமைப்பு, சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக்-8, MR-SAM மற்றும் S-400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பால் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பது சாத்தியமே என துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளுக்கு இணையாக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பு, நாட்டின் வான் பாதுகாப்பு நவீனமயமாக்கலின் உச்சபட்சம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Tags: இஸ்ரேல்"Sudarshan Chakra" to strengthen air defense - acts like Lord Krishna's weaponசுதர்சன சக்ராபகவான் கிருஷ்ணரின் ஆயுதம்சுதர்சன சக்ரா திட்டம்
ShareTweetSendShare
Previous Post

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

Next Post

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies