அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
Jun 15, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி கைபற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், 8 CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 11 மணி நேரமாக நடைபெற்றுவந்த சோதனை நிறைவடைந்த நிலையில், சிபியூ, பிரிண்டர் மற்றும் பல ஆவணங்கள் அடங்கிய பெட்டியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் பெரியசாமியின் வாகனத்தை சோதனையிட முற்பட்ட அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் சரவணன் தீக்குளிக்க முயன்றார். பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சரவணனை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்திரா வீட்டில் 17 மணி நேரமாக நடந்த சோதனையில் 2 பைகள் மற்றும் ஒரு சூட்கேஸில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்திரா வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவலறிந்து திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக, அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: Enforcement DirectorateMinister I. Periyasamyraid in Minister I. Periyasamy houseED officials seized a box
ShareTweetSendShare
Previous Post

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Next Post

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies