வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் "சுதர்சன சக்ரா" - பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!
Sep 8, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் அயன் டோமைப் போல் இந்தியாவின் வான் பரப்பைப் பாதுகாக்கச் சுதர்சன சக்ரா திட்டம் தயாராகி வருவதாகக் குடியரசு தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பகவான் கிருஷ்ணரின் ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் தயாராகி வரும் இந்த திட்டம் எப்படிச் செயல்படும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கிருஷ்ணரின் சக்திவாய்ந்த ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் புதிய வான் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2035-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டம், வான் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்பட்டு துல்லியமாக எதிர் தாக்குதல் நடத்தும் திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்து புராணங்களின் அடிப்படையில் சுதர்சன சக்ரா என்பது பகவான் விஷ்ணுவின் ஆயுதங்களுள் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை நோக்கி ஏவப்படும் அந்த ஆயுதமானது, அதீத வேகத்தில் இலக்குகளைத் தாக்கி அழித்து, பின் ஏவப்பட்டவரிடமே வந்து சேரும் திறன் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, சக்திவாய்ந்த ஆயுத அமைப்பைக் கொண்டிருக்கும் சுதர்சன சக்ரா திட்டம், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பதோடு மட்டுமின்றி, அவர்கள் மீதும் துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு கவசம் விரிவடைந்துகொண்டே இருக்கும் எனவும், இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக உணர முடியும் என்றும் பிரதமர் மோடி தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நடைமேடைகள், மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்கள், வரும் 2035-ம் ஆண்டிற்குள் தேசியப் பாதுகாப்பு கேடயத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, இது வழக்கமான ராணுவ மண்டலங்களுக்கு அப்பால் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான அரசின் உந்து சக்தியை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் அயன் டோமைப் போல் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்தும் சுதர்சன சக்ரா நம்மைப் பாதுகாத்து நாட்டின் மீது ஒரு பாதுகாப்பு கேடயமாகச் செயல்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சுதர்சன சக்ரா திட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் அளவுக்குச் செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். இந்தியாவின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் ஒருங்கிணைப்பதே சுதர்சன சக்ரா திட்டத்தின் மையமாகும்.

அதன்படி, IACCS என்னும் ஒருங்கிணைக்கப்பட்ட AIR COMMAND மற்றும் CONTROL SYSTEM வலையமைப்பை, ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்துப் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலவை அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதன் மீது துல்லிய தாக்குதலை நடத்தும் ஒரு தடையற்ற வலையமைப்பை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகச் செயல்படவுள்ள சுதர்சன சக்ரா திட்டம், பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

ஃபைபர் ஆப்டிக் அடிப்படையிலான தொலைத்தொடர்பு கட்டமைப்பு கொண்டு வடிவமைக்கப்படவுள்ள IACCS அமைப்பு, சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக்-8, MR-SAM மற்றும் S-400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பால் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பது சாத்தியமே என துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளுக்கு இணையாக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பு, நாட்டின் வான் பாதுகாப்பு நவீனமயமாக்கலின் உச்சபட்சம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Tags: இஸ்ரேல்"Sudarshan Chakra" to strengthen air defense - acts like Lord Krishna's weaponசுதர்சன சக்ராபகவான் கிருஷ்ணரின் ஆயுதம்சுதர்சன சக்ரா திட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

Next Post

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Related News

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies